மேலும் அறிய

13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கேட் ஆப் இந்தியா பகுதியில் நேற்று மாலை எலிபெண்டா தீவுக்கு நீல் கமல் என்ற பயணிகள் படகு சென்று கொண்டிருந்தது.

படகில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் முழு அளவில் இருந்தும் விபத்துக்கு முழு பொறுப்பும் கடற்படை விரைவு படகுதான் என விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கேட் ஆப் இந்தியா பகுதியில் நேற்று மாலை எலிபெண்டா தீவுக்கு நீல் கமல் என்ற பயணிகள் படகு சென்று கொண்டிருந்தது. பயணிகள் படகு பிற்பகல் 3:15 மணிக்கு புறப்பட்டு சென்றது. நீல் கமல் படகு வெளியூர்களில் இருந்து பலரை ஏற்றிச் சென்றது. அவர்களில் சிலர் முதல் முறையாக ஊருக்கு வருகை தந்தனர்.

அப்போது அங்கு அதிவேகமாக வந்த கடற்படை படகு கட்டுப்பாட்டை இழந்து நீல் கமல் படகு மீது மோதியது. 3:55 மணிக்கு நடுக்கடலில் விபத்து ஏற்பட்டது. இதில் படகு தண்ணீரில் மூழ்கியது. படகில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கினர். 

மாலை 4 மணியளவில், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த ஜவஹர்லால் நேரு ஆணையத்தின் (JNPA) பைலட் கப்பலின் பணியாளர்கள் மீட்புப் பணிகளைத் தொடங்கி 56 பயணிகளைக் காப்பாற்றினர். தொடர்ந்து ஒரு சில தனியார் கப்பல்களின் ஊழியர்களும் இந்த மீட்பு நடவடிக்கையில் இணைந்து கொண்டனர். இறுதியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் மரைன் போலீஸ் ஆகியோர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கடலில் தத்தளித்த 99 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பை படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார். 

இந்த கோர விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் என விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், “கடற்படைக்கு சொந்தமான அதிவிரைவு படகுதான் படகை சேதப்படுத்தியது. என் படகில் முழு பாதுகாப்பு அம்சங்களும் இருந்தன. ஜே.என்.பி.டி துறைமுகம், உரன், எலிபெண்டா தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்று வருகிறேன். கடலில் மூழ்கிய படகில் எந்த பழுதும் கிடையாது. படகுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

இதனிடையே கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “டிசம்பர் 18, 2024 அன்று சுமார் 4 மணி அளவில், என்ஜின் சோதனைக்கு உட்பட்ட கடற்படைக் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, புட்சர் தீவில் உள்ள பயணிகள் படகு நீல் கமல் மீது மோதியது. நான்கு கடற்படை ஹெலிகாப்டர்கள், 11 கடற்படைக் கப்பல்கள், மூன்று கடலோர காவல்படை படகுகள் மற்றும் சம எண்ணிக்கையிலான மரைன் போலீஸ் படகுகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டன” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த விபத்து குறித்து இரண்டு தனித்தனி விசாரணைகளுக்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் இந்திய கடற்படை உத்தரவிட்டுள்ளனர். என்ஜின்கள் தரம் குறைவாக இருந்ததா என்றும் கடற்படை விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
Embed widget