மேலும் அறிய

13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கேட் ஆப் இந்தியா பகுதியில் நேற்று மாலை எலிபெண்டா தீவுக்கு நீல் கமல் என்ற பயணிகள் படகு சென்று கொண்டிருந்தது.

படகில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் முழு அளவில் இருந்தும் விபத்துக்கு முழு பொறுப்பும் கடற்படை விரைவு படகுதான் என விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கேட் ஆப் இந்தியா பகுதியில் நேற்று மாலை எலிபெண்டா தீவுக்கு நீல் கமல் என்ற பயணிகள் படகு சென்று கொண்டிருந்தது. பயணிகள் படகு பிற்பகல் 3:15 மணிக்கு புறப்பட்டு சென்றது. நீல் கமல் படகு வெளியூர்களில் இருந்து பலரை ஏற்றிச் சென்றது. அவர்களில் சிலர் முதல் முறையாக ஊருக்கு வருகை தந்தனர்.

அப்போது அங்கு அதிவேகமாக வந்த கடற்படை படகு கட்டுப்பாட்டை இழந்து நீல் கமல் படகு மீது மோதியது. 3:55 மணிக்கு நடுக்கடலில் விபத்து ஏற்பட்டது. இதில் படகு தண்ணீரில் மூழ்கியது. படகில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கினர். 

மாலை 4 மணியளவில், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த ஜவஹர்லால் நேரு ஆணையத்தின் (JNPA) பைலட் கப்பலின் பணியாளர்கள் மீட்புப் பணிகளைத் தொடங்கி 56 பயணிகளைக் காப்பாற்றினர். தொடர்ந்து ஒரு சில தனியார் கப்பல்களின் ஊழியர்களும் இந்த மீட்பு நடவடிக்கையில் இணைந்து கொண்டனர். இறுதியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் மரைன் போலீஸ் ஆகியோர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கடலில் தத்தளித்த 99 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பை படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார். 

இந்த கோர விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் என விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், “கடற்படைக்கு சொந்தமான அதிவிரைவு படகுதான் படகை சேதப்படுத்தியது. என் படகில் முழு பாதுகாப்பு அம்சங்களும் இருந்தன. ஜே.என்.பி.டி துறைமுகம், உரன், எலிபெண்டா தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்று வருகிறேன். கடலில் மூழ்கிய படகில் எந்த பழுதும் கிடையாது. படகுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

இதனிடையே கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “டிசம்பர் 18, 2024 அன்று சுமார் 4 மணி அளவில், என்ஜின் சோதனைக்கு உட்பட்ட கடற்படைக் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, புட்சர் தீவில் உள்ள பயணிகள் படகு நீல் கமல் மீது மோதியது. நான்கு கடற்படை ஹெலிகாப்டர்கள், 11 கடற்படைக் கப்பல்கள், மூன்று கடலோர காவல்படை படகுகள் மற்றும் சம எண்ணிக்கையிலான மரைன் போலீஸ் படகுகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டன” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த விபத்து குறித்து இரண்டு தனித்தனி விசாரணைகளுக்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் இந்திய கடற்படை உத்தரவிட்டுள்ளனர். என்ஜின்கள் தரம் குறைவாக இருந்ததா என்றும் கடற்படை விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
Udhayanidhi Stalin Interview : ’திமுகவிற்கு எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
’திமுகவின் எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
Udhayanidhi Stalin Interview : ’திமுகவிற்கு எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
’திமுகவின் எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Gold rate today: தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
Top 10 News Headlines: புத்தாண்டு கொண்டாட்டம், சிலிண்டர் விலை உயர்வு, தங்கம் விலை சரிவு - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: புத்தாண்டு கொண்டாட்டம், சிலிண்டர் விலை உயர்வு, தங்கம் விலை சரிவு - 11 மணி வரை இன்று
Embed widget