மேலும் அறிய

13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கேட் ஆப் இந்தியா பகுதியில் நேற்று மாலை எலிபெண்டா தீவுக்கு நீல் கமல் என்ற பயணிகள் படகு சென்று கொண்டிருந்தது.

படகில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் முழு அளவில் இருந்தும் விபத்துக்கு முழு பொறுப்பும் கடற்படை விரைவு படகுதான் என விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கேட் ஆப் இந்தியா பகுதியில் நேற்று மாலை எலிபெண்டா தீவுக்கு நீல் கமல் என்ற பயணிகள் படகு சென்று கொண்டிருந்தது. பயணிகள் படகு பிற்பகல் 3:15 மணிக்கு புறப்பட்டு சென்றது. நீல் கமல் படகு வெளியூர்களில் இருந்து பலரை ஏற்றிச் சென்றது. அவர்களில் சிலர் முதல் முறையாக ஊருக்கு வருகை தந்தனர்.

அப்போது அங்கு அதிவேகமாக வந்த கடற்படை படகு கட்டுப்பாட்டை இழந்து நீல் கமல் படகு மீது மோதியது. 3:55 மணிக்கு நடுக்கடலில் விபத்து ஏற்பட்டது. இதில் படகு தண்ணீரில் மூழ்கியது. படகில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கினர். 

மாலை 4 மணியளவில், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த ஜவஹர்லால் நேரு ஆணையத்தின் (JNPA) பைலட் கப்பலின் பணியாளர்கள் மீட்புப் பணிகளைத் தொடங்கி 56 பயணிகளைக் காப்பாற்றினர். தொடர்ந்து ஒரு சில தனியார் கப்பல்களின் ஊழியர்களும் இந்த மீட்பு நடவடிக்கையில் இணைந்து கொண்டனர். இறுதியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் மரைன் போலீஸ் ஆகியோர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கடலில் தத்தளித்த 99 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பை படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார். 

இந்த கோர விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் என விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், “கடற்படைக்கு சொந்தமான அதிவிரைவு படகுதான் படகை சேதப்படுத்தியது. என் படகில் முழு பாதுகாப்பு அம்சங்களும் இருந்தன. ஜே.என்.பி.டி துறைமுகம், உரன், எலிபெண்டா தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்று வருகிறேன். கடலில் மூழ்கிய படகில் எந்த பழுதும் கிடையாது. படகுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

இதனிடையே கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “டிசம்பர் 18, 2024 அன்று சுமார் 4 மணி அளவில், என்ஜின் சோதனைக்கு உட்பட்ட கடற்படைக் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, புட்சர் தீவில் உள்ள பயணிகள் படகு நீல் கமல் மீது மோதியது. நான்கு கடற்படை ஹெலிகாப்டர்கள், 11 கடற்படைக் கப்பல்கள், மூன்று கடலோர காவல்படை படகுகள் மற்றும் சம எண்ணிக்கையிலான மரைன் போலீஸ் படகுகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டன” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த விபத்து குறித்து இரண்டு தனித்தனி விசாரணைகளுக்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் இந்திய கடற்படை உத்தரவிட்டுள்ளனர். என்ஜின்கள் தரம் குறைவாக இருந்ததா என்றும் கடற்படை விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Top 10 News Headlines: கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget