மேலும் அறிய

தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் மச்சக்கண்ணு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் ரவிக்குமார்.

ஜோலார்பேட்டை அருகே  மது போதையில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மகன் கட்டையால் தாக்கியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் மச்சக்கண்ணு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் ரவிக்குமார். இவர் தினந்தோறும் குடித்துவிட்டு தனது மனைவியான மணிமேகலை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திரும்பவும் அதேபோல குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. 

இதனால் மணிமேகலை தனது மகனான சாரங்கபாணிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது சாரங்கபாணியும் குடித்திருந்த காரணத்தால் தந்தை மகன் இருவருக்கும் இடையே கைகலப்பு முற்றியதாக தெரிகிறது.

அப்போது சாரங்கபாணி தனது தந்தையை கட்டையால்  பலமாக தலையில் தாக்கியதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார் ரவிக்குமார்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விட்டதாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் பலத்த காயமடைந்துள்ளதால் தர்மபுரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் உயிரை காப்பாற்ற முடியாது என்று கூறியதன் காரணமாக நேற்று மாலை அங்கிருந்து தனியாருக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் ரவிக்குமாரை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது வரும் வழியிலேயே ரவிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் மத்தியில் பேசி புதைக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில்  ஜோலார்பேட்டை போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. ரகசியமாக வந்த தகவலையடுத்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

அதன் காரணமாக சாரங்கபாணியை ஜோலார்பேட்டை போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்று  விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கைது செய்து ஆம்பூர் மெஜிஸ்ட்ரேட்  முன்பு நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

மது போதையில் தந்தை மற்றும் மகன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் மகன் கட்டையால் தாக்கியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது மேலும் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விட்டதாக நாடகம் ஆடியது  இந்த சம்பவத்தில் நிகிழ்ந்தேறியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Embed widget