மேலும் அறிய

Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?

அண்ணி சுதாவை செல்வராஜ் அடிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் தேங்காய் உரிக்கும் கடப்பாறையால் செல்வராஜை குத்திவிட்டு ரேவதியை தாக்கியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அடுத்த இனாம் பைரோஜி மாமரத்துகாடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி ரேவதி. இவர்களது வீட்டிற்கு அருகிலேயே செல்வராஜின் சகோதரர் சிவஞானம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் குடியிருந்து வரும் பூர்வீக குடும்ப நிலம் தொடர்பாக செல்வராஜ் மற்றும் சிவஞானம் ஆகிய இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த சிவஞானம் அருகில் இருந்த தேங்காய் உரிக்கும் கடப்பாரையால் செல்வராஜின் நெஞ்சில் குத்தினார். 

இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் கீழே சரிந்து விழுந்து உயிரிழந்தார். அதே சமயம் இருவரின் சண்டையை தடுக்க வந்த ரேவதியை தலையில் சிவஞானத்தின் மனைவி சுதா கடப்பாறையால் தாக்கினார். இதில் ரேவதிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவர்கள் செல்வராஜ் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக ஆட்டையாம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர் காயமடைந்து கிடந்த ரேவதியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சடலமாக கிடந்த செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைதொடர்ந்து சம்பவம் தொடர்பாக சிவஞானம் மற்றும் அவரது மனைவி சுதா ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் முன்விரோத தகராறில் கொலை நடந்தது தெரியவந்துள்ளது. செல்வராஜுக்கு சிவஞானம், தங்கதுரை, பூமிநாதன் ஆகிய மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளன. இவர்களுக்கு சொந்தமாக ஆறு சென்ட் வீட்டு நிலமும், 40 சென்ட் விவசாய நிலமும் உள்ளது. இதில் பூமிநாதன் உயிரிழந்த நிலையில் சகோதரிகள் இருவருக்குமான பாகங்கள் ஏற்கனவே பிரித்துக் கொடுக்கப்பட்டு விட்டது. தற்போது மீதமுள்ள மனையை பிரிப்பதில் சகோதரர்கள் மூன்று பேருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனிடையே கடந்த 15 ஆம் தேதி செல்வராஜ் தனது வீட்டின் முன் பகுதியில் கூரை போட முயன்றுள்ளார். அப்போது சிவஞானத்துடன் வழிதடப் பிரச்சினை ஏற்பட்டது. தொடர்ந்து 16 ஆம் தேதி இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அண்ணி சுதாவை செல்வராஜ் அடிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவஞானம் தேங்காய் உரிக்கும் கடப்பாறையால் செல்வராஜை குத்திவிட்டு ரேவதியை தாக்கியுள்ளார். இதற்கு அவரது மனைவி சுதா உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் கணவன் மனைவி இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பூர்வீக நில தகராறில் சகோதரரே கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget