மேலும் அறிய

Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?

அண்ணி சுதாவை செல்வராஜ் அடிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் தேங்காய் உரிக்கும் கடப்பாறையால் செல்வராஜை குத்திவிட்டு ரேவதியை தாக்கியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அடுத்த இனாம் பைரோஜி மாமரத்துகாடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி ரேவதி. இவர்களது வீட்டிற்கு அருகிலேயே செல்வராஜின் சகோதரர் சிவஞானம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் குடியிருந்து வரும் பூர்வீக குடும்ப நிலம் தொடர்பாக செல்வராஜ் மற்றும் சிவஞானம் ஆகிய இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த சிவஞானம் அருகில் இருந்த தேங்காய் உரிக்கும் கடப்பாரையால் செல்வராஜின் நெஞ்சில் குத்தினார். 

இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் கீழே சரிந்து விழுந்து உயிரிழந்தார். அதே சமயம் இருவரின் சண்டையை தடுக்க வந்த ரேவதியை தலையில் சிவஞானத்தின் மனைவி சுதா கடப்பாறையால் தாக்கினார். இதில் ரேவதிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவர்கள் செல்வராஜ் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக ஆட்டையாம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர் காயமடைந்து கிடந்த ரேவதியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சடலமாக கிடந்த செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைதொடர்ந்து சம்பவம் தொடர்பாக சிவஞானம் மற்றும் அவரது மனைவி சுதா ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் முன்விரோத தகராறில் கொலை நடந்தது தெரியவந்துள்ளது. செல்வராஜுக்கு சிவஞானம், தங்கதுரை, பூமிநாதன் ஆகிய மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளன. இவர்களுக்கு சொந்தமாக ஆறு சென்ட் வீட்டு நிலமும், 40 சென்ட் விவசாய நிலமும் உள்ளது. இதில் பூமிநாதன் உயிரிழந்த நிலையில் சகோதரிகள் இருவருக்குமான பாகங்கள் ஏற்கனவே பிரித்துக் கொடுக்கப்பட்டு விட்டது. தற்போது மீதமுள்ள மனையை பிரிப்பதில் சகோதரர்கள் மூன்று பேருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனிடையே கடந்த 15 ஆம் தேதி செல்வராஜ் தனது வீட்டின் முன் பகுதியில் கூரை போட முயன்றுள்ளார். அப்போது சிவஞானத்துடன் வழிதடப் பிரச்சினை ஏற்பட்டது. தொடர்ந்து 16 ஆம் தேதி இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அண்ணி சுதாவை செல்வராஜ் அடிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவஞானம் தேங்காய் உரிக்கும் கடப்பாறையால் செல்வராஜை குத்திவிட்டு ரேவதியை தாக்கியுள்ளார். இதற்கு அவரது மனைவி சுதா உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் கணவன் மனைவி இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பூர்வீக நில தகராறில் சகோதரரே கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

New Mexico Flash Flood: மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Mexico Flash Flood: மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Embed widget