மேலும் அறிய

போக்சோவில் கைதானவர் தற்கொலை விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்.

தற்கொலையில் காவல்துறையினருக்கு தொடர்பு உள்ளதாக கூறி மனைவி தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கல்லலைச் சேர்ந்த சகுந்தலாதேவி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 

என்  கணவர் நாச்சியப்பன். மைனர் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தேவகோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் இருந்து விடுவிக்க என் கணவரிடம் போளீசார் ரூ.50 வட்சம் பெற்றுள்ளனர். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்டு அவருக்கு எதிராக போக்சோ மற்றும் எஸ்சி-எஸ்டி

வன்கொடுமை தடுப்புசட்டம் உள்ளிட்ட பல்வே பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த என் கணவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கீரனூர் போவீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே, என் கணவருக்கு எதிரான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது பாலியல் வழக்கு மற்றும் தற்கொலை வழக்கில் போலீசாருக்கு பங்கு உள்ளது. என் கணவரிடம் ரூ.50 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர். போலீசாரால் தான் தற்கொலை செய்துள்ளார். இது குறித்து கல்லல் போலீசில் புகார் அளித்துள்ளேன். எந்த மேல் நடவடிக்கையும் இல்லை. போலீசார் முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை என்பதால், என் கணவர் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்..

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி  பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, இந்த வழக்கில்,  டிஐஜியை இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது. அவர், கீரனூர் போலீசில் உள்ள தற்கொலை வழக்கை மதுரை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். இதேபோல், மனுதாரர் கல்லல் போலீசில் அளித்த புகாரையும் சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். சிபிசிஐடி டிஎஸ்பி போக்சோ வழக்கு, தற்கொலை வழக்கு மற்றும் மனுதாரர் புகார் ஆகியவற்றின் மீது 3 மாதத்தில் விரிவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.


மற்றொரு வழக்கு

கொலை வழக்குகளை  விசாரிப்பதற்கென காவல்துறையில் புதிதாக  தனிப்பிரிவை உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த சதீஷ் குமார், சங்கர்  ஆகியோர் கொலை வழக்கில் கடந்த 2017 நவம்பர் 6 அன்று   திருச்சி 3 வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு  நீதிபதி வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரி மேல் முறையீட்டு மனுவினைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, "கடுமையான கொலை குற்றங்கள் குறித்து, போலீசார் நடத்தும்  விசாரணை தொடர்பாக இந்த நீதிமன்றம் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தது. கொலை குற்றங்களை சட்டம் ஒழங்கு காவல்துறையினரே விசாரிப்பதால், அதிக வேலை பளு காரணமாக  விசாரணையை தொய்வின்றி,  தீவிரமாக நடத்த அவர்களால் இயலவில்லை.

எனவே, கொலைக் குற்றங்களை  விசாரிப்பதற்கு காவல் துறையில் புதிதாக  தனி பிரிவை உருவாக்க வேண்டும். அரசு இதனை தீவிரமாகக் கவனத்தில் கொள்ள நீதிமன்றம் வலியுறுத்துகிறது. முதல் கட்டமாக கொலை வழக்குகளின் விசாரணையை மட்டுமே கையாளும் வகையில் காவல் துறையில், தனிப்பிரிவை உருவாக்குவது அரசின் கடமை என கருத்து தெரிவித்து, இது குறித்து தமிழக காவல்துறை தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Top 10 News Headlines: டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
Ukraine Vs Russia: அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Top 10 News Headlines: டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
Ukraine Vs Russia: அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone Sri Lanka: இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
TN Roundup: டிட்வா புயல் அப்டேட், கடலோர மாவட்டங்களில் கனமழை, எடப்பாடி பயணம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: டிட்வா புயல் அப்டேட், கடலோர மாவட்டங்களில் கனமழை, எடப்பாடி பயணம் - தமிழகத்தில் இதுவரை
Ditwah Cyclone Update: Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditwah Cyclone Helpline: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
Embed widget