மேலும் அறிய

முல்லை பெரியாறு அணையில் தொடந்து நீர்வரத்து அதிகரிப்பு-கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி , மதுரை , திண்டுக்கல் உட்பட 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை நீரை தேக்க வேண்டும் ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் கோரிக்கை.

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 137 அடியை  எட்டியுள்ளது.  இதனால் முல்லை பெரியாறு ஆற்று கரையோர பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 137 அடியாகவும் , அணையின் நீர் இருப்பு 6,521 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 3,244 கன அடியாகவும், அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் வெளியேற்றம் என்பது 2,200 கன அடியாகவும் உள்ளது.


முல்லை பெரியாறு அணையில் தொடந்து நீர்வரத்து அதிகரிப்பு-கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாற்றில் 11.10 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 10.8 மில்லி மீட்டர் மழையும் பெய்ததால் அணைக்கு நீர் வரத்து தற்போது 137.60 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் 137 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதால் பெரியாற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணி துறையினர் அறிவித்துள்ளனர்.


முல்லை பெரியாறு அணையில் தொடந்து நீர்வரத்து அதிகரிப்பு-கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

மேலும் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை மற்றும் போலீசார் தண்டோரா மூலம் அறிவித்துள்ளனர். அணையில் 142 அடி வரை நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தேனி மாவட்ட விவசாயிகளிடம்  பல நாட்களாக உள்ள நிலையில், இது குறித்து  5 மாவட்ட விவசாய சங்க தலைவர் கே.எம்.அப்பாஸ் கூறியதாவது முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரை தேக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முல்லை பெரியாறு அணையில் தொடந்து நீர்வரத்து அதிகரிப்பு-கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்  வைகை அணையிலும்  போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால்  தற்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைத்து அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரை தேக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாய சங்கத்தினர் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே மூன்று முறை 142 அடி வரை தண்ணீரை தேக்கியுள்ள நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக அணையில் நீரை அதிகமாக தேக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது பருவ மழை அதிகம் இருப்பதால் இந்த சூழலுக்கு ஏற்ப அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் ஐந்து மாவட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget