மேலும் அறிய

5ஆவது மெகா தடுப்பூசி முகாம் - தேனியில் ஒரே நாளில் 42 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது

’’தேனி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 103 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தாலும் சென்ற மாதம் மாத ஆரம்பத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஓரிலக்க எண்ணாக இருந்தது, மாத கடைசியில் இரண்டு இலக்க எண்ணாக மாறியது. மீண்டும் தற்போது பாதிப்பு எண்ணிக்கை இந்த மாதம் ஆரம்பத்தில் குறைந்திருந்த நிலையில் தற்போது இரண்டு இலக்க எண்ணாக மாறியுள்ளது. இந்த மாத ஆரம்பத்திலிருந்து தற்போது வரை  இரண்டு பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


5ஆவது மெகா தடுப்பூசி முகாம் - தேனியில் ஒரே நாளில் 42 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவது குறித்தும் தடுப்பூசி போட்டு கொள்வது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வுகள் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பொது மக்களின் வசதிக்காக மாவட்டங்களில் பல்வேறு நகராட்சிகள், ஊராட்சி மன்றங்கள், பேருராட்சி அலுவலகங்கள் மூலமாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது.


5ஆவது மெகா தடுப்பூசி முகாம் - தேனியில் ஒரே நாளில் 42 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது

தமிழகம் முழுவதும்  ஏற்கனவே மாவட்டம் தோறும் 4 கட்டங்களாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.  தற்போது நேற்று 5 ம் கட்ட தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் தேனி மாவட்டத்தில் சுமார் 400 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இம்முகாம்கள் தேனி மாவட்டத்தில் உள்ள  அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக், பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் என  நடந்த முகாம்களில் மக்கள் ஆர்வத்தோடு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 

5ஆவது மெகா தடுப்பூசி முகாம் - தேனியில் ஒரே நாளில் 42 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது

தேனி மாவட்டத்தில் 400 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதில்  இந்த மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 42 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் முதல் தவணை தடுப்பூசியை 18 ஆயிரத்து 808 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 23 ஆயிரத்து 542 பேரும் செலுத்திக் கொண்டனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 103 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசியை 6 லட்சத்து 13 ஆயிரத்து 819 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 2 லட்சத்து 49 ஆயிரத்து 284 பேரும் செலுத்திக் கொண்டனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற 

https://bit.ly/2TMX27X

 

 இன்று கவனிக்கவேண்டிய முக்கிய செய்திகள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

தமிழ்நாட்டின் தென் மண்டலத்தில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள்...!

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

நீங்க யோசிங்க..ஆஃப்ட்ரால்..ஆளுநர்: வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்!
நீங்க யோசிங்க..ஆஃப்ட்ரால்..ஆளுநர்: வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்!
IPL 2025 CSK vs RCB: கோலி அதகளம்.. பின்னிய பெத்தேல்! ஷெப்பர்ட் காட்டடி அரைசதம்! சிஎஸ்கே டார்கெட் இவ்ளோவா?
IPL 2025 CSK vs RCB: கோலி அதகளம்.. பின்னிய பெத்தேல்! ஷெப்பர்ட் காட்டடி அரைசதம்! சிஎஸ்கே டார்கெட் இவ்ளோவா?
Kathiri Veyil: எச்சரிக்கை மக்களே: கத்திரி வெயில் ஸ்டார்ட்...எப்போது வரை இருக்கும்?
Kathiri Veyil: எச்சரிக்கை மக்களே: கத்திரி வெயில் ஸ்டார்ட்...எப்போது வரை இருக்கும்?
சென்னை வழியாக தீவிரவாதிகள் தப்பிச் சென்றனரா ? - இலங்கையில் நடந்த அதிரடி சோதனை
சென்னை வழியாக தீவிரவாதிகள் தப்பிச் சென்றனரா ? - இலங்கையில் நடந்த அதிரடி சோதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நான் தான் முடிவெடுப்பேன்” கறாராக சொன்ன ஸ்டாலின்! கலக்கத்தில் மா.செ.க்கள்”விஜய்-இபிஎஸ் சேரக் கூடாது” காய் நகர்த்தும் ரஜினிகாந்த்! காரணம் என்ன?TVK Vijay Meets Rahul Gandhi: ராகுலை சந்திக்கும் விஜய்! தவெக-காங் கூட்டணி? மாறும் கூட்டணி கணக்கு!விஜய்யை பார்க்கப்போன போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீங்க யோசிங்க..ஆஃப்ட்ரால்..ஆளுநர்: வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்!
நீங்க யோசிங்க..ஆஃப்ட்ரால்..ஆளுநர்: வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்!
IPL 2025 CSK vs RCB: கோலி அதகளம்.. பின்னிய பெத்தேல்! ஷெப்பர்ட் காட்டடி அரைசதம்! சிஎஸ்கே டார்கெட் இவ்ளோவா?
IPL 2025 CSK vs RCB: கோலி அதகளம்.. பின்னிய பெத்தேல்! ஷெப்பர்ட் காட்டடி அரைசதம்! சிஎஸ்கே டார்கெட் இவ்ளோவா?
Kathiri Veyil: எச்சரிக்கை மக்களே: கத்திரி வெயில் ஸ்டார்ட்...எப்போது வரை இருக்கும்?
Kathiri Veyil: எச்சரிக்கை மக்களே: கத்திரி வெயில் ஸ்டார்ட்...எப்போது வரை இருக்கும்?
சென்னை வழியாக தீவிரவாதிகள் தப்பிச் சென்றனரா ? - இலங்கையில் நடந்த அதிரடி சோதனை
சென்னை வழியாக தீவிரவாதிகள் தப்பிச் சென்றனரா ? - இலங்கையில் நடந்த அதிரடி சோதனை
ஆரஞ்சு அலர்ட்..9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
ஆரஞ்சு அலர்ட்..9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Pakistan ISI: பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை.. NIA விசாரணையில் திடுக் தகவல்...
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை.. NIA விசாரணையில் திடுக் தகவல்...
Bison Release Date: பைசன் வர்றான் வழியை விடு... இந்த தீபாவளி துருவ் விக்ரம் பண்டிகையா? ரிலீஸ் தேதி இதுதான்
Bison Release Date: பைசன் வர்றான் வழியை விடு... இந்த தீபாவளி துருவ் விக்ரம் பண்டிகையா? ரிலீஸ் தேதி இதுதான்
திறமையுடன் கூடிய நம்பிக்கைதான் வெற்றி பெறும் தூண்டுகோல் - தஞ்சை மேயர் சண்.ராமநாதன்
திறமையுடன் கூடிய நம்பிக்கைதான் வெற்றி பெறும் தூண்டுகோல் - தஞ்சை மேயர் சண்.ராமநாதன்
Embed widget