மேலும் அறிய

விழாவை புறக்கணித்த பேராசிரியர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி

செனட் உறுப்பினர்கள் விழாவை புறக்கணித்த பேராசிரியர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.

ஆளுநர் ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை 45 பேர் செனட் உறுப்பினர்கள் புறக்கணிப்பு - விழாவை புறக்கணித்த பேராசிரியர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி

முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பேரா. சுரேஷ், பேரா. ரமேஷ்ராஜ் இருவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்தேன் என பதிவு.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்று முடிந்தது. இதில் பல்கலைக் கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான  ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் முனைவர் படிப்பு முடித்தவர்வளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் பரிந்துரைத்த நிலையில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை. இந்நிலையில்  நேற்று ஆளுநர் தலைமையில் பட்டமளிப்பு விழா முடிவடைந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது சமூகவலைதள பக்கத்தில் ஆளுநர் கையால் பட்டங்களை பெற மறுத்த சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் ஆளுநர் ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை 45 பேர் செனட் உறுப்பினர்கள் விழாவை புறக்கணித்த பேராசிரியர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.

நேற்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முகநூல்  தளத்தில் பதிவிட்டுள்ளதில் : “கல்விக்கழகு  கசடுகளை புறந்தள்ளல்” விடுதலை போராட்ட மாண்பையும், பல்கலைக்கழகத்தின் உரிமையையும் அவமதிக்கும் விதமாகவும் நடந்து கொண்டார் ஆளுநர் ரவி. எனவே அவர் பங்கெடுத்த  மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை செனட் உறுப்பினர்கள் 73 பேரில் 45 பேர் புறக்கணித்துள்ளனர். இது இந்தியப்பல்கலைக்கழக வரலாற்றின் மகத்தான போராட்டமாகும்.  தங்களின் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பேரா. சுரேஷ், பேரா. ரமேஷ்ராஜ் இருவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Embed widget