மேலும் அறிய

ஜல்லிக்கட்டு காளைக்கு 10-ம் ஆண்டு நினைவு அஞ்சலி ; மணிமண்டபத்தில் பூஜை நடத்திய மக்கள் !

”பல மாடு பிடி வீரர்களின் குடலையும் சரித்துள்ளது. அந்த அளவுக்கு வீரமிக்க காளை ஆனால் எங்கள் கிராமத்து மக்களிடம் தனது கோபத்தை சிறிதளவும் காண்பித்தது இல்லை”.

சிவகங்கை மாவட்டம்  கண்டாக்கிபட்டி ஊராட்சியை சேர்ந்த  கிராமம் சிவல்பட்டி. இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இங்குள்ள மந்தைக்கருப்பன சுவாமி கோவிலுக்காக கிராம மக்கள் சார்பில் கோயில் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு காளை பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி வாகை சூடி வந்தது.  அந்த ஜல்லிக்கட்டு காளை 'சிவல்பட்டி மந்தைக்கருப்பன சுவாமி கோயில் காளை' என்றே அழைக்கப்பட்டது. கிராமத்தின் பெருமை பல்வேறு பகுதியிலும் கொண்டு செலுத்தியது.

ஜல்லிக்கட்டு காளைக்கு 10-ம் ஆண்டு நினைவு அஞ்சலி ; மணிமண்டபத்தில் பூஜை நடத்திய மக்கள் !
இதனால் கிராம மக்கள் காளையின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தனர். இந்தளவு பெயர்பெற்ற காளை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டில் பங்கேற்றபின் உடல் நல குறைவால் உயிரிழந்தது. அப்போது   சிவல்பட்டி  கிராமத்தின் நடுவில் மந்தைக் கருப்பன சுவாமி கோயில் அருகிலேயே புதைக்கப்பட்டது.  அங்கு கிராமத்தினர் சார்பில் மணிமண்டபமும் அமைக்கப்பட்டது. அதில் அந்த காளையின் முழு உருவத்தை சிலையாக வடித்து அதனையும் தங்களது குலதெய்வமாக வழிபாடு  செய்கின்றனர்.  அந்த காளை இறந்த தினத்தினை கிராம மக்கள் தங்களது முன்னோர்கள் இறந்த தினத்தை நினைவு தினமாக அனுசரிப்பதைபோல் இன்றளவும் அனுசரித்துவருகின்றனர்.

ஜல்லிக்கட்டு காளைக்கு 10-ம் ஆண்டு நினைவு அஞ்சலி ; மணிமண்டபத்தில் பூஜை நடத்திய மக்கள் !
10 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆண்டு 10 வது நினைவு தினம் என்பதால் அந்த காளையின் உருவ சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். தற்போது அந்த காளைக்கு இணையாக கிராம மக்கள் சார்பில் வளர்க்கப்படும் காளைக்கு அலங்காரம் செய்து அனைத்து மரியாதைகளையும் செய்தனர். மேலும் மந்தைக் கருப்பன சுவாமிக்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு செய்து அதனை கிராம மக்களே வணங்கி பொங்கலிட்டு அதனை அனைவருக்கும் பகிர்ந்தனர்.
 
மேலும் அந்த உயிரிழந்த காளையின் உருவ சிலை முன்பு அனைவரும் புகைப்படம் எடுத்து தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். கிராம சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றதுடன் அதில் கலந்துகொண்ட குழந்தைகள் ஏமாற்றத்தை சந்திக்கக்கூடாது என்பதற்காக அனைவருக்கும் பரிசுகளை வழங்கி கிராம மக்கள் கெளரவித்தனர். இறந்த காளைக்கு 10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்திய கிராம மக்களின் இந்த செயல் அனைவரிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ஜல்லிக்கட்டு காளைக்கு 10-ம் ஆண்டு நினைவு அஞ்சலி ; மணிமண்டபத்தில் பூஜை நடத்திய மக்கள் !
கிராம மக்கள் பேசும்போது, ”எங்கள் கிராமத்து கோயில் காளை ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டில் என போட்டிகளில் சீறி விளையாடும் பல மாடு பிடி வீரர்களின் குடலையும் சரித்துள்ளது. அந்த அளவுக்கு வீரமிக்க காளை ஆனால் எங்கள் கிராமத்து மக்களிடம் தனது கோபத்தை சிறிதளவும் காண்பித்தது இல்லை. அந்த அறிவான காளைக்கு 10-ம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்துள்ளோம்" என்றனர்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Meerut Murder: கணவரை துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த மனைவி - காதலனுடன் குத்தாட்டம், வீடியோ வைரல்
Meerut Murder: கணவரை துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த மனைவி - காதலனுடன் குத்தாட்டம், வீடியோ வைரல்
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Meerut Murder: கணவரை துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த மனைவி - காதலனுடன் குத்தாட்டம், வீடியோ வைரல்
Meerut Murder: கணவரை துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த மனைவி - காதலனுடன் குத்தாட்டம், வீடியோ வைரல்
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025: முதல் போட்டிக்கே ஆபத்தா! கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு அலர்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்
IPL 2025: முதல் போட்டிக்கே ஆபத்தா! கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு அலர்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025 Fan Parks: ஐபிஎல் ஃபேன் பார்க் - எங்கு, எப்போது? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் அமையும்? டிக்கெட் விலை
IPL 2025 Fan Parks: ஐபிஎல் ஃபேன் பார்க் - எங்கு, எப்போது? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் அமையும்? டிக்கெட் விலை
Embed widget