மேலும் அறிய
திருப்புவனம் சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பு... ஒரு கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி !
திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆவணி மாதத்தில் முகூர்த்த நாள் என்பதால் காலை முதலே ஆடுகள் விற்பனை களை கட்டியது.

ஆடுகள் விற்பனை
Source : whats app
திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பு, ஒரு கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்புவனத்தில் 3 ஆயிரம் லிட்டர் பால் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் அதிகளவு கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. தே.புதுகோட்டை, பெத்தானேந்தல், அல்லிநகரம், கீழடி, கொந்தகை, பழையனுர் உள்ளிட்ட பகுதிகளில் கறவை மாடு, ஆடு, கோழி உள்ளிட்டவைகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு தினசரி திருப்புவனம் பகுதியில் இருந்து அதிகபட்சமாக 3 ஆயிரம் லிட்டர் பால் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
ஆடுகள் விற்பனை அதிகரிப்பு
திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை காலை ஆறு மணி முதல் பத்துமணி வரை கால்நடை சந்தையும் அதன்பின் காய்கறி சந்தையும் நடைபெறும், மதுரை, தேனி, திண்டுக்கல், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடு, கோழிகள் வாங்க வருவார்கள். இது தவிர விவசாயிகள் வீடுகளில் வளர்ப்பதற்காகவும் முகூர்த்த நாட்களில் விருந்திற்கு அசைவம் சமைப்பதற்காகவும் ஆடு, கோழி வாங்க வருகை தருவார்கள். இந்நிலையில் ஆவணி மாதம் முழுவதும் முகூர்த்தம் என்பதால் அதிக அளவில் விற்பனைக்கு ஆடு, கோழி வந்திருந்தன. 10 கிலோ எடை கொண்ட ஆடு சந்தையில் 11 ஆயிரம் ரூபாய் என விற்பனையானது. தற்போது 15 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
முகூர்த்த நாள் என்பதால் ஆடுகள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை
மேலும் ஒன்றரை கிலோ எடை கொண்ட நாட்டுக் கோழி 500 ரூபாயில் இருந்து 700 ரூபாயாக உயர்ந்துள்ளது. செம்மறியாடுகள் விலை வழக்கம் போல , ஏழாயிரம் என விற்பனை செய்யப்பட்டது. கிராமப்புற மக்கள் வீடுகளில் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை சந்தையில் விற்பனை செய்து தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள், இந்த மாதம் முழுவதும் முகூர்த்த நாள் என்பதால் ஆடுகள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















