மேலும் அறிய

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - தாளாளரை 3 நாள் காவலில் விசாரிக்க உத்தரவு

ஜோதிமுருகனை கோர்ட்டின் வழக்கமான நுழைவு வாயில் வழியாக அழைத்து வராமல் கோர்ட்டின் பின்புறம் உள்ள வாசல் வழியாக அழைத்து வந்து மகிளா நீதிமன்ற போலீசார் ஆஜர்படுத்தினர்

திண்டுக்கல்-பழனி சாலையில் முத்தனம்பட்டி அருகே தனியார் நர்சிங், கேட்டரிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரி ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவருக்கு உடந்தையாக விடுதி வார்டன் அர்ச்சனா என்பவர் இருந்ததாகவும் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் தாடிக்கொம்பு போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து விடுதி வார்டன் அர்ச்சனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - தாளாளரை 3 நாள் காவலில் விசாரிக்க உத்தரவு
 
மேலும் கல்லூரி தாளாளரை கைது செய்ய போலீசார் செல்வதற்குள் அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கோர்ட்டில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் சரண் அடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜோதிமுருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தாடிக்கொம்பு போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - தாளாளரை 3 நாள் காவலில் விசாரிக்க உத்தரவு
 
இதையடுத்து அவரை திண்டுக்கல் மகிளா  நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் போளூர் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது ஜோதிமுருகனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தாடிக்கொம்பு போலீசார் அனுமதி கேட்டனர். அதன்பேரில் கல்லூரி தாளாளரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜோதிமுருகனை போலீசார் காவலில் எடுத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - தாளாளரை 3 நாள் காவலில் விசாரிக்க உத்தரவு
 
கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது மாணவ-மாணவிகள் திரண்டு போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோர்ட்டுக்கு வரும் அனைத்து வழிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சந்தேகப்படும்படி அந்த வழியாக செல்பவர்களை நிறுத்தி விசாரணை செய்த பின்னரே கோர்ட்டுக்குள் செல்ல அனுமதித்தனர். அதேபோல் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் ஜோதிமுருகனை கோர்ட்டின் வழக்கமான நுழைவு வாயில் வழியாக அழைத்து வராமல் கோர்ட்டின் பின்புறம் உள்ள வாசல் வழியாக அழைத்து வந்து மகிளா நீதிமன்ற போலீசார் ஆஜர்படுத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்தால் திமுக அதல பாதாளத்திற்கு செல்லும் - எம்.எல்.ஏ., முஸ்தபா சாடல் !
பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்தால் திமுக அதல பாதாளத்திற்கு செல்லும் - எம்.எல்.ஏ., முஸ்தபா சாடல் !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
Embed widget