மேலும் அறிய

சவுக்கு சங்கரை வரும் 24 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

சவுக்கு சங்கர் ஜாமின் கோரிய வழக்கில் வரும் 24ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும். அதுவரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

 
சவுக்கு சங்கரின் மீதான கஞ்சா வழக்கின் விசாரணை ஜனவரி 27 ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தும் உத்தரவு. சவுக்குசங்கரின் கஞ்சா வழக்கு நிர்வாக காரணங்களுக்காக மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு 2ஆவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக விசாரணைக்கு மாற்றப்படுவதாகவும் நீதிபதி செங்கமலச்செல்வன் அறிவிப்பு.
 

சவுக்குசங்கர் கஞ்சா பிடிவாரண்ட்

 
பிரபல யூடியுர் சவுக்குசங்கர் கஞ்சா வைத்திருந்தாக தேனி மாவட்ட PC பட்டி காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் இருந்து வந்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில்  விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பின்னர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு 2நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது.
 

சவுக்கு சங்கர் ஜாமின் கோரிய மனு

 
இதனையடுத்து நீதிமன்ற காவல் நிறைவடைந்து இன்று மீண்டும் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தீல் நீதிபதி செங்கமலச்செல்வன் முன் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது  கஞ்சா வைத்திருந்த வழக்கு விசாரணையை ஜனவரி 27ம் தேதிக்கு நீதிபதி செங்கமலச்செல்வன்  ஒத்திவைத்தார். இதேபோன்று இவ்வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமின் கோரிய மனு மீது  விசாரணை நடைபெற்ற நிலையில் சவுக்கு சங்கர் ஜாமின் வழங்கும் மனு மீது டிசம்பர் 24ஆம் தேதியான திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும்  எனவும், அதுவரை மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் சவுக்கு சங்கர் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி செங்கமலச்செல்வன் சவுக்கு சங்கருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை மதுரை அரசு மருத்துவமனையில் பெற்றுக்கொள்ளவும் உத்தரவிட்டார்.
 

சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

 
இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் யூடியுபர் சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சவுக்குசங்கர் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட பிரதான வழக்கின் விசாரணையானது, மதுரை மாவட்ட போதைப்பொருள்  தடுப்பு முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக இதுவரை விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில்  நிர்வாக காரணங்களுக்காக மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு 2ஆவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக விசாரணைக்கு மாற்றப்படுவதாகவும் நீதிபதி செங்கமலச்செல்வன் கூறினார்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்!  அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்! அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
"இந்து என்பதால் கொல்லப்படுகிறார்கள்" முருகன் மாநாட்டில் அண்ணாமலை சர்ச்சை கருத்து
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓட்டுனருக்கு அடி, உதை அடாவடி செய்த இளைஞர்கள் வெளியான சிசிடிவி காட்சி
”கர்பமா இருக்க என்ன அடிச்சான்” உறைய வைக்கும் ஆதாரம் அஸ்மிதா உருக்கம் |  Shri Vishnu | Ashmitha
பயம் காட்டும் பாஜக தொகுதி மாறும் ஜெயக்குமார் எடப்பாடிக்கு தூது | EPS | ADMK BJP Alliance
எ.வ.வேலு-பாமக அருள் சந்திப்பு! திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி? ரவுண்டு கட்டும் அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்!  அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்! அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
"இந்து என்பதால் கொல்லப்படுகிறார்கள்" முருகன் மாநாட்டில் அண்ணாமலை சர்ச்சை கருத்து
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
துர்கா ஸ்டாலினும் கந்த சஷ்டி பாட வேண்டும் - முதலமைச்சர் மனைவிக்கு எல்.முருகன் வேண்டுகோள்
துர்கா ஸ்டாலினும் கந்த சஷ்டி பாட வேண்டும் - முதலமைச்சர் மனைவிக்கு எல்.முருகன் வேண்டுகோள்
GBU 57 Bomb:
GBU 57 Bomb: "பங்கர் பஸ்டர் பாம்" அணு ஆயுதம் அல்லாத மிகப்பெரிய ஏவுகணை, துளை போட்டு இலக்கை தூக்கும்
Iran Israel War: ஈரான் இந்த ஒரு முடிவு எடுத்தால்... இந்தியாவில் எகிறும் விலைவாசி - என்ன முடிவு அது?
Iran Israel War: ஈரான் இந்த ஒரு முடிவு எடுத்தால்... இந்தியாவில் எகிறும் விலைவாசி - என்ன முடிவு அது?
LIVE | Kerala Lottery Result Today (22.06.2025): சம்ருதி கேரள லாட்டரில சக்கைப்போடு போடப்போவது யாரு?
LIVE | Kerala Lottery Result Today (22.06.2025): சம்ருதி கேரள லாட்டரில சக்கைப்போடு போடப்போவது யாரு?
Embed widget