![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மேலூர் அருகே உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அமைச்சர் மூர்த்தி சார்பில் 5 லட்சம் நிதியுதவி
மேலூர் அருகே உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி சார்பில் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.
![மேலூர் அருகே உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அமைச்சர் மூர்த்தி சார்பில் 5 லட்சம் நிதியுதவி Rs 5 lakh given on behalf of the Minister to the family of the girl who died near Melur! மேலூர் அருகே உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அமைச்சர் மூர்த்தி சார்பில் 5 லட்சம் நிதியுதவி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/08/b5428da7d00827b59606402c0d347c51_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மதுரை மாவட்டம் மேலூர் அருகே 17 வயதுடைய இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற இளைஞனுடன் சென்றதாக கூறப்பட்ட நிலையில் சிறுமி கடத்தி செல்லப்பட்டதாக கூறி பெண்ணின் பெற்றோர் மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் அப்பெண் வீடு திரும்பிய நிலையில் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடையவே, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த நாகூர் ஹனிபா உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். மேலும் 4 தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நான்கு வழிச்சாலையில் நேற்று முன்தினம் பிற்பகலில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசியதால் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் பயணி ஒருவருக்கு காயமும் ஏற்பட்டது. தும்பைபட்டியில் பதட்டம் ஏற்படவே மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் விசாரணை நடத்த ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார். சுமார் 3 மணி நேரமாக பேச்சு வார்தையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நீதி கேட்டு மாலையில் மதுரை – திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
#Abpnadu மேலூர் அருகே உயிரிழந்த சிறுமியின் உடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.. அமைச்சரின் சார்பில் ஐந்து லட்ச ரூபாய் நிவாரண உதவி..@pmoorthy21 | #dmk | @Madurai | #melur @MohamedYasinR2 | @rajarajan pic.twitter.com/s1pwdoFOyv
— Arunchinna (@iamarunchinna) March 8, 2022
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி சார்பில் ஆறுதல் கூறிய அக்கட்சி நிர்வாகிகள் அமைச்சர் மூர்த்தி சார்பில் வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை சிறுமியின் தாய், தாத்தா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். சிறுமியின் இறப்புக்கு தமிழக அரசு உரிய நீதி பெற்றுத் தரும் எனவும் தேவையான உதவிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் செய்து தருவதாக உறுதி அளித்ததாகவும் சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)