மேலும் அறிய

மேலூர் அருகே உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அமைச்சர் மூர்த்தி சார்பில் 5 லட்சம் நிதியுதவி

மேலூர் அருகே உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி சார்பில் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே 17 வயதுடைய இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற இளைஞனுடன் சென்றதாக கூறப்பட்ட நிலையில் சிறுமி கடத்தி செல்லப்பட்டதாக கூறி பெண்ணின் பெற்றோர் மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் அப்பெண் வீடு திரும்பிய நிலையில் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடையவே, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த நாகூர் ஹனிபா உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.  மேலும் 4 தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலூர் அருகே உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அமைச்சர் மூர்த்தி சார்பில் 5 லட்சம் நிதியுதவி

இந்த நிலையில்  நான்கு வழிச்சாலையில் நேற்று முன்தினம் பிற்பகலில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசியதால் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் பயணி ஒருவருக்கு காயமும் ஏற்பட்டது. தும்பைபட்டியில் பதட்டம் ஏற்படவே மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் விசாரணை நடத்த ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார். சுமார் 3 மணி நேரமாக பேச்சு வார்தையில் ஈடுபட்டனர்.  இந்த நிலையில் நீதி கேட்டு மாலையில் மதுரை – திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


மேலூர் அருகே உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அமைச்சர் மூர்த்தி சார்பில் 5 லட்சம் நிதியுதவி

 
பாதிக்கப்பட்ட சிறுமியின் கிராமத்தில் கூடுதலாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று உயிரிழந்த சிறுமியின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆர்.டி.ஓ முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. பின்னர் சிறுமியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் சிறுமியின் உடல் தும்பைப்பட்டி கொண்டுவரப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
 

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி சார்பில் ஆறுதல் கூறிய அக்கட்சி நிர்வாகிகள் அமைச்சர் மூர்த்தி சார்பில் வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை சிறுமியின் தாய், தாத்தா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். சிறுமியின் இறப்புக்கு தமிழக அரசு உரிய நீதி பெற்றுத் தரும் எனவும் தேவையான உதவிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் செய்து தருவதாக உறுதி அளித்ததாகவும் சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
கோவையில் சோகம்; தண்ணீர் தொட்டியில் தாய், மகள்கள் சடலமாக மீட்பு
கோவையில் சோகம்; தண்ணீர் தொட்டியில் தாய், மகள்கள் சடலமாக மீட்பு
Embed widget