மேலும் அறிய

ராமேஸ்வரம்-மதுரையில் இடையே சாதாரண கட்டண ரயிலை விட வேண்டும்- நவாஸ்கனி எம்.பி கோரிக்கை

ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு பேருந்தில் செல்ல  100 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் ரயிலில் 20 ரூபாய் கட்டணம் தான் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது

கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்தப்பட்ட ராமேஸ்வரம்-மதுரை வழித்தட சாதாரண கட்டண ரயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் 2020 மார்ச் 25 முதல் சாதாரண கட்டண ரயில்கள், விரைவு ரயில்கள், தொலைதூர அதிவிரைவு ரயில்கள் உள்பட அனைத்து ரயில் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டு வருவதை தொடர்ந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு விரைவு ரயில்கள்,  இணைய தள முன்பதிவு டிக்கெட் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரண கட்டண ரயில்களான ராமேஸ்வரம் மதுரை இடையே இரு மார்க்கத்திலும் இயங்கிய காலை, மதியம், மாலை நேர ரயில்கள், திருச்சி- ராமேஸ்வரம் இடையே இரு மார்க்கத்திலும் இயங்கிய காலை, மதிய நேர ரயில்கள் இயக்கப்படவில்லை. ஆகஸ்ட் 6ஆம் தேதியுடன் 500 நாட்களை கடந்தும் கூட சாதாரண கட்டண ரயில்கள் இயக்கப்படவில்லை.

ராமேஸ்வரம்-மதுரையில் இடையே சாதாரண கட்டண ரயிலை விட வேண்டும்- நவாஸ்கனி எம்.பி கோரிக்கை

கல்வி, வேலை, மருத்துவம், வணிக பொருட்கள் கொள்முதல் என அனைத்து வகையிலும் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மதுரையை தான் சார்ந்துள்ளனர். இதற்கு ராமநாதபுரம்-மதுரை இடையேயான பஸ், ரயில் சேவை பயன்பட்டு வந்தது. கடந்த 2020 மார்ச் 25 கொரோனா முழு ஊரடங்கிற்கு முன்பு வரை ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு காலை 5:30, 11:20, மாலை 6:00 மணிக்கும், மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு காலை 6:50, மதியம் 12:40, மாலை 6:10 மணிக்கும் ரயில்கள் இயக்கப்பட்டன. எனவே ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி, தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு மனு ஒன்றை  அனுப்பியுள்ளார்.

ராமேஸ்வரம்-மதுரையில் இடையே சாதாரண கட்டண ரயிலை விட வேண்டும்- நவாஸ்கனி எம்.பி கோரிக்கை

அதில், கொரோனா காலக்கட்டத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் பட்டியலில் ராமேஸ்வரம்- மதுரை சிறப்பு ரயில் இயக்கப்படாததால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பல்வேறு தேவைகளுக்காக மதுரையை சார்ந்துள்ளனர். இத்தகைய ரயில் சேவை அடித்தட்டு மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் அதிக அளவில் பயன்படுத்தும் சேவையாக உள்ளது. தூர இடைவெளி குறைவாக உள்ளதால் ராமேஸ்வரம்- மதுரை சிறப்பு ரயில் இயக்குவதில் சிரமம் என இருந்தால் ராமேஸ்வரம் - பழநி என வழித்தடத்தை மாற்றி அமைத்து மதுரை வழியாக சிறப்பு ரயில் சேவையை துவங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பேருந்தில் செல்ல  ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு 100 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் ரயிலில் 20 ரூபாய் கட்டணம் தான் வசூலிக்கப்பட்டது. இதனால் ரயில் சேவையை ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்கள் அதிகம் பயன்படுத்தினர். ஆனால், தற்போது சாதாரண மக்கள் அதிக செலவு செய்து வாடகை வாகனங்களில் மதுரைக்கு சென்று திரும்பும் நிலை உள்ளது.

இதனால், கமிஷன் அடிப்படையில் டிக்கெட் விற்பனை முகவர்கள், ரயில்களில் வியாபாரம் செய்வோர் வேலை இழந்துள்ளனர். ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரையில் சரக்குகள் வாங்கி விற்கும் வியாபாரிகள் கடந்த 17 மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம்-மதுரையில் இடையே சாதாரண கட்டண ரயிலை விட வேண்டும்- நவாஸ்கனி எம்.பி கோரிக்கை

மதுரையில் பணியாற்றும் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை உள்ளிட்ட பகுதி அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த மதுரை-ராமேஸ்வரம் ரயில் சேவை நிறுத்தத்தால் கூடுதல் போக்குவரத்து செலவை எதிர்கொண்டுள்ளனர். வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி ராமேஸ்வரம்- மதுரை சாதாரண கட்டண ரயில்களை மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே மதுரை கோட்ட பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget