மேலும் அறிய
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: நீதிமன்ற அவமதிப்பு மேல்முறையீடு! மார்ச் 16-க்கு ஒத்திவைப்பு !
அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, கால அவகாசம் கோரப்பட்ட நிலையில், வழக்கை மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருப்பரங்குன்றம்
Source : abp
திருப்பரங்குன்றம் தீபத்தூணிலும் தீபம் ஏற்றும் வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை அமர்வு உத்தரவு.
தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார்
இந்தாண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக்கோரி ராம ரவிக்குமார் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அதிலும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
வழக்கை மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, கால அவகாசம் கோரப்பட்ட நிலையில், வழக்கை மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























