மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரயில் தாமதமாக புறப்பட்டது - காரணம் என்ன ?
ரயில்பெட்டி பராமரிப்பு பணி காரணமாக ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரயில் தாமதமாக புறப்பட்டது.
ரயில்
ராமேஸ்வரம் - கன்னியாகுமரி வாரம் மும்முறை சேவை அதிவிரைவு ரயில் ராமேஸ்வரத்திலிருந்து திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.15 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி - ராமேஸ்வரம் வாரம் மும்முறை சேவை அதிவிரைவு ரயில் கன்னியாகுமரியில் இருந்து செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 05.35 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.
![ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரயில் தாமதமாக புறப்பட்டது - காரணம் என்ன ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/17/b35b0df5bfb80bf5f78a97ead966dbe41665979535790184_original.jpg)
இந்நிலையில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணி நடைமேடை புதுப்பிக்கும் வேலை நடைபெற்று வருவதன் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று இரவு 09.00 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - கன்னியாகுமரி விரைவு ரயில் நேற்று இரவு 11.30 மணிக்கு 150 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டது.
![ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரயில் தாமதமாக புறப்பட்டது - காரணம் என்ன ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/16/7ac2ebc416ea14b4796405061882baac1665940282822184_original.jpg)
மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் வழக்கம் போல மதுரையில் இருந்து இயக்கப்படும்
சமயநல்லூர் அருகே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) நவம்பர் 28 முதல் நவம்பர் 30 வரை மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற இயலாததால் மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் வழக்கம் போல மதுரையில் இருந்து இயக்கப்படும். அதே போல மதுரை - செகந்திராபாத் (கச்சிகுடா) வாராந்திர விரைவு ரயில் (07192) நவம்பர் 30 அன்று 45 நிமிடங்கள் தாமதமாக காலை 06.15 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அனால் தற்போது மதுரை - கச்சிகுடா வாராந்திர விரைவு ரயில் நவம்பர் 30 அன்று மதுரையில் இருந்து வழக்கம் போல காலை 05.30 மணிக்கு புறப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - டோல் பிரச்னை ; இனி உள்ளூர் மக்கள் கட்டணமின்றி வாகனங்களில் பயணிக்கலாம் - அமைச்சர் மூர்த்தி
மேலும் செய்திகள் படிக்க - மானாவாரி நிலத்திலும் மரம் வளர்த்து லட்சங்களில் சம்பாதிக்கலாம்: கருத்தரங்கு நடத்தும் காவேரி கூக்குரல்! விபரம் உள்ளே !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion