மேலும் அறிய

குடும்பத்தில் அடுத்தடுத்த உயிரிழப்புகள்; துரத்திய வறுமை - துக்கம் தாளாமல் தந்தை, மகன் தற்கொலை

’’தனது 2 மனைவிகளையும் இழந்து, தற்போது மகனின் அறுவை சிகிச்சைக்கும் பணம் இல்லாததால் லோகநாதன் மிகவும் மனமுடைந்து இருந்துள்ளார்'’

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள முசாபர் கனி தெருவில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஜோதிடரான இவருக்கு வெங்கடேஷ், நிவாஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் லோகநாதனின் முதல் மனைவி பவானி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், இரண்டாவதாக கல்பனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து கல்பனாவும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். எனவே லோகநாதன் தனது மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.


குடும்பத்தில் அடுத்தடுத்த உயிரிழப்புகள்; துரத்திய வறுமை - துக்கம் தாளாமல் தந்தை, மகன் தற்கொலை

இதனைதொடர்ந்து லோகநாதனின் மூத்த மகன் வெங்கடேஷ் திருமணம் முடிந்து தற்போது ஆறு மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வெங்கடேஷ் உள்ள நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதும், அறுவை சிகிச்சை செய்வதற்கு 18 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே வெங்கடேஷின் குடும்பத்தினர் அறுவை சிகிச்சைக்கு தேவையான தொகையை திரட்டி வருகின்றனர். இதற்கிடையே தனது 2 மனைவிகளையும் இழந்து, தற்போது மகனின் அறுவை சிகிச்சைக்கும் பணம் இல்லாததால் லோகநாதன் மிகவும் மனமுடைந்து இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று லோகநாதன் வீட்டு கதவு நீண்ட நேரம் பூட்டியே இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது லோகநாதன் மற்றும் அவரது 2வது மகன் நிவாஸ் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்துள்ளனர்.


குடும்பத்தில் அடுத்தடுத்த உயிரிழப்புகள்; துரத்திய வறுமை - துக்கம் தாளாமல் தந்தை, மகன் தற்கொலை

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பரமக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் லோகநாதன் மற்றும் நிவாஸ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரது வீட்டில் விஷமும் இருந்துள்ளது. அதையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை-மகன் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்வில் தொடர்ந்து வந்த சோதனை, கழுத்தை நெறிக்கும் கஷ்ட  சூழ்நிலை, இவையெல்லாம் சேர்ந்து அவரை தற்கொலைக்கு தூண்டிய நிலையில், நான் இறந்துவிட்டால் தனக்குப் பிறகு மன மளர்ச்சி குன்றிய  தனது மகனை பார்த்துக்கொள்ள இந்த உலகில் யாரும் இல்லை. எனவே அவனை அனாதையாக விட்டுச் செல்ல கூடாது என்ற எண்ணத்தில் தன் மகனுக்கும் விஷம் கொடுத்து அதன்பிறகு தூக்கிட செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட அந்த தந்தையின் கடைசி நிமிடங்களை நினைக்கயில்  கல்மனமும் கசியும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Embed widget