மேலும் அறிய

உதாசீனப்படுத்தியதால் ஓபிஎஸ் இன்று அரசியல் அநாதையாகிவிட்டார் - ஆர்.பி.உதயகுமார்

மூத்த நிர்வாகிகள், தொண்டர்களை உதாசீனப்படுத்தியதால் ஓபிஎஸ் இன்று அரசியல் அனாதையாகிவிட்டார் - எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா கோவிலுக்கு சென்றார். அம்மா கோவிலில் உள்ள முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா., எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து புதிதாக எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற ஆர்.பி.உதயகுமாருக்கு கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய ஆர்.பி.உதயகுமார், அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு அ.தி.மு.க., துரோகிகளுடன் தி.மு.க., அரசு உடந்தையாக இருந்தது. அதன் விளைவாக அ.தி.மு.க., தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது.

உதாசீனப்படுத்தியதால் ஓபிஎஸ் இன்று அரசியல் அநாதையாகிவிட்டார் - ஆர்.பி.உதயகுமார்
மூத்த நிர்வாகிகள் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையை ஒ.பி.எஸ்., உதாசினப்படுத்தினார். மாவட்ட செயலாளர்கள், தலைமைகழக  நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கருத்துக்கள் சொன்னார்கள்.  ஆனால்., தலைமை பொறுப்பில் இருந்துகொண்டு தொண்டர்கள் நிர்வாகிகள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் சர்வாதிகார போக்குடன் இருந்ததால் இன்றைக்கு சவுக்கடியாக இன்று ஓ.பி.எஸ் அரசியல் அநாதையாகிவிட்டார். குடியரசு தலைவர் பிரிவு உபசார விழாவிலும் அ.தி.மு.க.,வின் ஒற்றை முகமாக அ.தி.மு.க.,வின் பொதுச்செயலாளரா கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்ப்பட்டுள்ளது.

உதாசீனப்படுத்தியதால் ஓபிஎஸ் இன்று அரசியல் அநாதையாகிவிட்டார் - ஆர்.பி.உதயகுமார்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்பதற்கு கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு சம்பவம் எடுத்துக்காட்டாக உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழக அரசிற்கு தலைகுனிவாக உள்ளது. கள்ளக்குறிச்சியில் மாணவின் இறப்பு சம்பவம் குறித்து தமிழக முதல்வர் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும். உண்மையான அதிமுகவானது., இன்றைக்கு திமுகவையும் உண்மையான அதிமுகவை எதிர்த்த துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் பாடம் புகட்டும் வகையில் 25ம் தேதி எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற முறையில் திமுக அரசின் மின்சார உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவைகள் முன்வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

உதாசீனப்படுத்தியதால் ஓபிஎஸ் இன்று அரசியல் அநாதையாகிவிட்டார் - ஆர்.பி.உதயகுமார்
துரோகத்தை வேறருக்கும் வகையில் வருகின்ற 26 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டம் இருக்கும். வரும் தேர்தல்களில் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், அதியமான் மண்டலம், கொங்கு மண்டலம், மத்தியமண்டலம் என எந்த மண்டலமாக இருந்தாலும் அனைத்திலும் அ.தி.மு.க.,வின் ஒற்றைத் தலைமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் வெற்றி கோட்டையாக இருக்கும் என தெரிவித்தார்.
 
முன்னதாக 2021-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட T. குண்ணத்தூர் அம்மா கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளரான வைத்தியலிங்கம் ஆகியோர் படம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Embed widget