TN Election: தகிக்கும் தேர்தல் களம்; முதல் நாள்லயே ஒன்றாய் சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய்
TN Election 2026: முதல் ஆளாக முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அதேபோல பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் ஜோசப் விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும் மனுத்தாக்கல் செய்தனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அனைத்துக் கட்சிகளும் முழுவீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனுத் தாக்கல்
இதற்கிடையே வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்கி உள்ளது. இந்த நிலையில் முதல் ஆளாக முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் தனது மனுவைத் தாக்கல் செய்தார்.
2011ஆம் ஆண்டு முதல், 2016, 2021, 2026 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் நின்று வருகிறார். தனது கொளத்தூர் தொகுதி மக்கள் தன்னை வெற்றிபெற வைப்பார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெரம்பூரில் விஜய் மனுத்தாக்கல்
அதேபோல பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் ஜோசப் விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இவர் வியாசர்பாடி பகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெவ்வேறு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
அதேபோல வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தேர்தல் வியூக மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு வேட்பாளர்கள் மனுத் தாக்கல்
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளில் வெவ்வேறு கட்சித் தலைவர்கள் தங்களின் வேட்புமனுத் தாக்கலைச் செய்து வருகின்றனர். காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், தேவகோட்டை தொகுதியில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Before You Go
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
ட்ரெண்டிங் செய்திகள்




















