மேலும் அறிய
தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.. மீனாட்சியம்மன் கோயிலில் செல்லூர் ராஜு சிறப்பு பிரார்த்தனை !
மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார் செல்லூர் ராஜு.

செல்லூர் ராஜு
Source : whatsapp
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளருமான செல்லூர் கே. ராஜு தெரிவித்துள்ளார்.
செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு
மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விரிவாகப் பேசினார். முன்னதாக, மதுரை மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்ற செல்லூர் ராஜு, மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று, எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என வேண்டி சிறப்புப் பிரார்த்தனை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
விலைவாசியைக் குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
தமிழகத்தில் எந்தக் கட்சி எத்தகைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையே இந்தத் தேர்தலின் உண்மையான கதாநாயகனாக திகழ்கிறது. எடப்பாடியார் எதைச் சொல்வாரோ அதைச் செய்வார், எதைச் செய்வாரோ அதைத்தான் சொல்வார் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் விலைவாசியைக் குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்து, போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதே அதிமுகவின் இலக்கு. தமிழகத்தில் அமைதியான சூழலையும், பாதுகாப்பான சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்ட எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்.
திட்டங்கள் முறையாகச் சென்றடைவதை அதிமுக உறுதி செய்யும்
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிதி உதவிகள் மற்றும் ரேஷன் கார்டுதாரர்களுக்கான கூப்பன்கள் போன்ற திட்டங்கள் முறையாகச் சென்றடைவதை அதிமுக உறுதி செய்யும். அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கானது. எடப்பாடியாரின் திட்டங்கள் ஏற்கனவே மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. மற்ற கட்சிகள் என்னதான் வாக்குறுதிகளை அள்ளி வீசினாலும், மக்கள் அதிமுகவின் பக்கமே நிற்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வரும்போது அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று எடப்பாடியார் மீண்டும் முதல்வராவது உறுதி, எனத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
Before You Go
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion


















