மேலும் அறிய

Nipah Virus: கேரளாவில் பரவும் நிபா வைரஸ்; தேனி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

நிபா வைரஸ் காய்ச்சல் என்பது வவ்வால்களிடம் இருந்து மனிதனுக்கு பரவுகிறது. எனவே பழங்களை வெந்நீரால் கழுவி சாப்பிட வேண்டும். வெடித்த பழங்கள், கடித்த பழங்களை உண்பதை தவிர்க்க வேண்டும்.

கேரளாவில் தற்போது காலநிலை மாற்றம் காரணமாக நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கோழிக்கோடு பகுதியில் இந்த காய்ச்சல் பாதிப்புக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க கேரள அரசு மாநிலம் முழுவதும் தீவிர தடுப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. குறிப்பாக கோழிக்கோடு மாவட்டத்தில் 7 கிராமங்களை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து தீவிர சுகாதார நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கேரள எல்லைப்பகுதியாக உள்ள கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Iphone 15 Series: அடடே இது வேறையா? புது ஆப்பிள் ஐபோனில் இஸ்ரோவின் தொழில்நுட்பம்: என்ன ஸ்பெஷல் தெரியுமா?


Nipah Virus: கேரளாவில் பரவும் நிபா வைரஸ்; தேனி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

அதன்படி, தேனி மாவட்டத்தில் கேரள எல்லைகளாக உள்ள குமுளி, போடிமெட்டு, கம்பமெட்டு பகுதிகளில் நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு முகாம் அமைத்து சுகாதாரத்துறையினர் கண்காணிக்க மாவட்ட  ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டார்.அதைத்தொடர்ந்து கம்பம்மெட்டு மலைப்பாதையில், 18-ம் கால்வாய் பகுதியில் நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய சித்தா டாக்டர் சிராஜூதீன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முரளி, தினேஷ், கம்பம் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரை கண்ணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் முகாமிட்டுள்ளனர்.இந்த குழுவினர், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி வாகனத்தில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என டிஜிட்டல் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மூச்சுவிடுவதில் சிரமம், வைரஸ் காய்ச்சல், தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் உள்ளதா? என்பது குறித்தும் கேட்கின்றனர்.

Minister Sekarbabu: “உப்பு சப்பு இல்லாத சனாதனம்; அண்ணாமலை தூக்கி பிடிக்க காரணம் இதுதான்” - சேகர் பாபு தாக்கு

Nipah Virus: கேரளாவில் பரவும் நிபா வைரஸ்; தேனி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

இந்த பரிசோதனையில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர் . இதேபோல் போடிமெட்டு, குமுளி உள்ளிட்ட எல்லை பகுதியிலும் சுகாதாரத்துறை, போலீசார் அடங்கிய குழுவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “நிபா வைரஸ் காய்ச்சல் என்பது வவ்வால்களிடம் இருந்து மனிதனுக்கு பரவுகிறது. எனவே பழங்களை வெந்நீரால் கழுவி சாப்பிட வேண்டும். வெடித்த பழங்கள், கடித்த பழங்களை உண்பதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்களிடம் நெருங்கிய தொடர்பை தவிர்க்க வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் கடுமையான தலைவலி, காய்ச்சல், சோர்வு, சுவாச பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்” என்றனர்.

இங்கு உடல் உறுப்புகள் விற்பனை... பிரபல மருத்துவமனை பெயரில் போலி இணையதளம் - நைஜீரியா வாலிபர் கைது

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget