மேலும் அறிய

நியோமேக்ஸ் விவகாரம்: மதுரையில் புகாரளிக்க குவிந்த முதலீட்டார்கள்

நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மீதான முதலீட்டார்கள் புகார் மனு அளிப்பதற்கான, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் 3ஆவது சிறப்பு முகாம்  ஏராளமான முதலீட்டார்கள் புகார் அளிக்க வருகை.

மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத  வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.  ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் சிலர் மதுரை  பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். 

நியோமேக்ஸ் விவகாரம்: மதுரையில் புகாரளிக்க குவிந்த முதலீட்டார்கள்
 
மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலையுயர்ந்த கார்கள் தங்கம் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போது கடந்த மாதம்  நியோமேக்ஸ்  நிறுவனத்தின் இயக்குனர்களான சைமன் ராஜா, கபில், இசக்கிமுத்து ,சகாயராஜா பத்மநாபன் , மலைச்சாமி ஆகிய 6பேரையும்  பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.  இதனிடையே நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில் நிறுவனர்களான வீரசக்தி, கமலக்கண்ணன் பாலசுப்பிரமணியன் ஆகியோருக்குலுக் அவுட் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. மேலும் இவர்கள்  ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சைமன்ராஜா, பத்மநாபன், கபில் ஆகிய மூவருக்கு மதுரை மாவட்ட பொருளாதார குற்றயவியல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கிய நிலையில் மூவரும் தினசரி மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டுவருகின்றனர்.

நியோமேக்ஸ் விவகாரம்: மதுரையில் புகாரளிக்க குவிந்த முதலீட்டார்கள்
 
இதனிடையே நியோமேக்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்கில் முதலீடு செய்து பணம் பெறாத முதலீட்டார்கள் புகார் மனு அளிப்பதற்கான ஏற்கனவே மதுரை மற்றும் விருதுநகரில் 2 சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டிருந்து அதில் ஏராளமானோர் புகார் மனுக்கள் அளித்தனர். இந்நிலையில் நியோமேக்ஸ் நிதி மோசடி தொடர்பான வழக்கில் நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 5 பிரதான நிறுவனங்கள் மற்றும் 20 கிளை நிறுவனங்களில் முதலீடு செய்த முதலீட்டார்கள் புகார் அளிக்க ஏதுவாக இன்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில்  பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா தலைமையில் புகார் மனு முகாம் நடைபெற்றுவருகிறது.

நியோமேக்ஸ் விவகாரம்: மதுரையில் புகாரளிக்க குவிந்த முதலீட்டார்கள்
 
இந்த முகாமில் நியோமேக்ஸ் லிமிடெட், (2) கார்லாண்டோ பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், (3) ட்ரான்ஸ்கோ பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், (4) டிரைடாஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், (5) குளோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்'' மற்றும் அதன் 20 கிளை நிறுவனங்களில் முதலீடு செய்த முதலீட்டார்கள் ஏராளமானோர் வருகை தந்து புகார் மனு அளித்துவருகின்றனர். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் ஏராளமான முதலீட்டார்கள் வருகை தந்துவருகின்றனர். பெரும்பாலம் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், விவசாயிகள், ஓய்வூதியம பெறக்கூடிய நபர்கள் அதிகளவிற்கு வருகை தந்த மனுக்களை அளித்துவருகின்றனர். நியோமேக்ஸ் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழி பத்திரங்கள், பில் உள்ளிட்ட ஆவணங்களுடன் ஏராளமானோர் புகார் அளித்துவருகின்றனர். இந்நிலையில் புகார் மனு முகாமிற்கு வருகை தரும் முதலீட்டார்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதோடு, அவர்களுக்கு உதவிகளையும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் செய்துவருகின்றனர். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget