மேலும் அறிய

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விரைவில் அறிவிப்பு - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

"மீனாட்சியம்மன் கோவில் வீர வசந்துராய மண்டபம் பழமை மாறாமல் முடிக்க வேண்டும் என்பதால் சற்று காலதாமதம் ஏற்படுகிறது" - அமைச்சர் சேகர்பாபு தகவல்.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் 2021-2023 ஆம் ஆண்டுக்கான மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சிப் பள்ளி துவக்க விழா நடைபெற்றது. இதில்  வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும்  அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தீ விபத்தினால் வீரவசந்தராயர் மண்டபம் முழுவதுமாக சிதலமடைந்தது. இந்நிலையில் தி.மு.க அரசு பொறுப்பேற்றதற்கு பின்பாக இந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் தெரிவித்திருந்தார். இதனால் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக பார்வையிட்டோம்.

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விரைவில் அறிவிப்பு - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
 
கோயில் பணிக்காக கல் தூண்கள் நாமக்கல்லில் தயார் செய்யப்பட்டு, 8 தூண்கள் மதுரை கொண்டுவரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஓதுவர் பயிற்சிப் பள்ளியை மீனாட்சியம்மன் கோயிலில் மேப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இங்கு புதிதாக 6 நபர்களுக்கு பயிற்சி பெற உள்ளனர். அதனையும் துவக்கி வைத்தோம். அதே போல் ராமநாதபுரத்தில் உள்ள கோயில்களையும் பார்வையிட்டு மேம்படுத்த நடவடிக்கை எடுக்க  உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ரோப்கார்கள் வசதிகள் முறையாக செய்யப்படும். கோயில்களில் இருந்து எடுக்கப்பட்ட தங்க நகைகள் முறையாக உருக்கப்பட்டு தங்க பிஸ்கட்டுகளாக மாற்றப்பட்டு, அதன் மூலம் வைப்பு நிதி பெறப்பட்டு கோயில் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். இதில் எந்த உள்னோக்கமும் இல்லாமல் வெளிப்படை தன்மையோடு செயல்படுவோம். இதற்கான எழும் விமர்சனங்களை தாங்கிக் கொள்வோம்" என்றார்.

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விரைவில் அறிவிப்பு - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
 
மேலும் மீனாட்சியம்மன் கோவில் பணிகள் எப்போது முடியும் என்ற கேள்விக்கு, மீனாட்சியம்மன் கோவில் வீர வசந்தராயர் மண்டபம் பழமை மாறாமல் முடிக்க வேண்டும் என்பதால் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும். மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து விரைவில் அறிக்கப்படும்" என்றார்

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விரைவில் அறிவிப்பு - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
 
அழகர் கோயில் மலைமீதுள்ள ராக்காயி அம்மன் கோயில் புனரமைப்பு செய்து குடமுழக்கு நடத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இணையளங்களில் கோயில் இடங்களை பதிவேற்றும் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அழகர்கோயில் அடிவாரத்திலிருந்து மலைமீதுள்ள ராக்காயி அம்மன் கோயில் வரை சாலை பணிகள் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget