மேலும் அறிய

மஹாளய அமாவாசை: தேனி, திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்த மக்கள்

வைகை ஆற்றில் புனித நீராடி பின்னர் கோவிலுக்கு சென்று மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

மாதந்தோறும் வரும் அமாவாசை காலங்களில் முன்னோர்களை நினைத்து பொதுமக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று எள்ளை நீரில் கரைத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். இதுபோன்ற காலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. எனவே ஆண்டுதோறும் நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் செய்வதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.  இந்த நிலையில் இந்த வருடம் புரட்டாசி மாதம் முதல் மஹாளயபட்ச அமாவாசை  நாளில் புனித ஸ்தலங்களில் தங்களின் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் கூடினர்.


மஹாளய அமாவாசை: தேனி, திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்த மக்கள்

தேனி மாவட்டம் கம்பம் அருகே பிரசித்திபெற்ற புண்ணிய ஸ்தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கும் சுருளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ள பூத நாராயணன் கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டது. கடந்த சில தினங்களாக சுருளி அருவியில்  நீர் வரத்து இல்லாமல் இருந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழை எதிரொலியால் அருவியில் நீர் வரத்தானது அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக சுற்றுலா துறையினர் சார்பாகவும், தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் சுருளி சாரல் விழா நடைபெற்று வரும் நிலையில் இன்று சாரல் விழாவனது நிறைவு பெறவுள்ளது. இதையொட்டி அருவியில் கூடுதலாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது. குறிப்பாக இன்று அமாவாசை நாளானதால் , முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். அதே போல சுருளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ள முல்லை பெரியாற்றிலும்  குளித்து பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.


மஹாளய அமாவாசை: தேனி, திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்த மக்கள்

இதேபோல் பெரியகுளம் பகுதியில் உள்ள அருள் மிகு பாலசுப்ரணிய திருக்கோவில் வராக நதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் இருகரைகளிலும் எதிர் எதிரே ஆண், பெண் மருத மரங்கள் உள்ளதால் இறந்த முன்னோர்களுக்கு வருடந்தோரும் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருவது வழக்கம். இந்நிலையில் இன்று அமாவாசை முன்னிட்டு பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பெரியகுளம் பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் தங்களின் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி தேன், பால், பச்சரிசி, வாழைப்பழம், எள் போன்ற பொருட்களைக் கொண்டு பிண்டம் செய்து வைத்து  தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டு பிண்டத்தை வராக நதி ஆற்றங்கரையில் கரைத்து தனது முன்னோர்களை வழிபட்டனர்.


மஹாளய அமாவாசை: தேனி, திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்த மக்கள்

அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி பேரணை வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பரிகாரஸ்தலமான ஆஞ்சநேயர் கோயிலில் இன்று அமாவாசையையொட்டி ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வைகை ஆற்றில் புனித நீராடி பின்னர் கோவிலுக்கு சென்று மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget