வைகை அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் ஒரு வாரத்திற்கு மட்டுமே குடிநீர் எடுப்பதற்கான தண்ணீர் உள்ளது !
வைகையாற்று பகுதியில் சட்டவிரோதமாக மோட்டார் மூலமாக தண்ணீர் எடுப்பதை கண்காணிக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நீர்வளத்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

வைகை அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் ஒரு வாரத்திற்கு மட்டுமே குடிநீர் எடுப்பதற்கான தண்ணீர் உள்ளது - நீர்வளத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்.
பட்டியல் விரைவில் கணக்கெடுத்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்
விவசாயிகள் வண்டல்மண் எடுப்பதற்கான நீர்நிலைகள் குறித்த பட்டியல் விரைவில் கணக்கெடுத்து அறிக்கை சமர்பிக்க வேண்டும். மதுரை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி வீரராகவராவ் அதிகாரிகளுக்கு உத்தரவு. மாற்று ஏற்பாடான பெரியாறு லோயர்கேம்ப் குடிநீர் திட்டம் மூலமாக மதுரை மாநகராட்சி பகுதிக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் - மாநகராட்சி முதன்மை பொறியாளர் தகவல்.
நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி வீரராகவராவ், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் அனைத்துறைகளில் உள்ள திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது கண்காணிப்பு அதிகாரி வீரராகவராவ் வைகை அணையின் நீர்மட்டம் குறைவதால் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா? மாற்று ஏற்பாடு குறித்து நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்
அதற்கு பதிலளித்த மாநகராட்சி முதன்மை பொறியாளர் ஒரு இந்த மாதம் இறுதிவரை குடிநீர் விநியோகிப்பதற்கான தண்ணீர் வைகை அணையில் உள்ளது எனவும், முல்லைபெரியாறு கூட்டுகுடிநீர் திட்டம் மூலமாகவும் குடிநீர் விநியோகம் செய்துவருவதால் மாநகராட்சி பகுதிகளில் குடீநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனவும், குடிநீர் விநியோகம் அளவீடு குறைவின்றி வழங்கப்படும் எனவும் பதிலளித்தார். வைகை அணையில் நாளுக்கு நாள் தண்ணீரின் மட்டம் குறைந்துவருவதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் உருவாகியுள்ளது குறிப்பிடதக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்





















