மேலும் அறிய

பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா? அலட்சியத்தை ஏற்க முடியாது- ஆவேசமான அண்ணாமலை!

குளிர்சாதனக் கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, தொலைதூர பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும்போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும்- அண்ணாமலை.

தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வழங்கப்படும் முட்டைகள் நீண்ட காலம் முன்பாகவே கொள்முதல் செய்யப்பட்டதாகவும் இதனால் குழந்தைகளின் உடல் நலன் கேள்விக்கு உள்ளாகும் எனவும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை, மதிய உணவுகளும் மதிய உணவும் மேல்நிலைப் பள்ளிகளில் மதிய உணவும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மதிய உணவின்போது அசைவம் உண்பவர்களுக்கு முட்டையும் சைவம் உண்பவர்களுக்கு வாழைப் பழமும் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதில் வழங்கப்படும் முட்டையின் தரம் குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறி உள்ளதாவது:

’’தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ரூ.5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ரூ.3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, குறைந்த விலைக்கு பெருமளவில் சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்பில் பாதிப்பு

முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் பொருள் அல்ல. குளிர்சாதனக் கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, பின்னர் தொலைதூர கிராமப்புற பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும் போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும்.

கடந்த திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமல் இருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்சனை அல்ல.

கடுமையான ஆய்வை மேற்கொள்க

லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் நம்பிக்கை சார்ந்ததாகும். எனவே, முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில், எந்தவித அலட்சியமும் ஏற்க முடியாது’’ என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

School Holiday: நாளை பள்ளிக்கு போக வேண்டாம்! திங்கட்கிழமையே விடுமுறை அறிவித்த கல்வித்துறை
School Holiday: நாளை பள்ளிக்கு போக வேண்டாம்! திங்கட்கிழமையே விடுமுறை அறிவித்த கல்வித்துறை
புதுச்சேரி ஆசிரியர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்! ‘மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயல்படுங்கள்’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி
புதுச்சேரி ஆசிரியர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்! ‘மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயல்படுங்கள்’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி
PM YASASVI கல்வி உதவித்தொகை: ரூ.1.25 லட்சம் வரை பெற விண்ணப்பிக்கலாம் - மாணவர்களுக்கு அழைப்பு!
PM YASASVI கல்வி உதவித்தொகை: ரூ.1.25 லட்சம் வரை பெற விண்ணப்பிக்கலாம் - மாணவர்களுக்கு அழைப்பு!
பள்ளி மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! ₹1.25 லட்சம் வரை உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க!
பள்ளி மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! ₹1.25 லட்சம் வரை உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
P Chidambaram:
P Chidambaram: "சட்டசபையை பாக்குறப்ப MP-யா இருக்கதை விட MLA-வா இருந்திருக்கலாம்னு தோணுது.." ப.சிதம்பரம் ஏக்கம்
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
"நான் சாப்பிட்றதுக்கே இன்னைக்கு பாண்டியராஜன்தான் காரணம்.." நன்றி மறக்காத நடிகை சீதா
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
Embed widget