மேலும் அறிய

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கு: மணீஷ் காஷ்யப்பிற்கு ஏப்ரல் 5 வரை காவல்

மணிஷ் காஷ்யப்பை வருகிற 5 ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டீனா பானு உத்தரவு.

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவதில் சூத்திரதாரியாக செயல்பட்ட மணிஷ் காஷ்யப் மீது தமிழ்நாட்டில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி பரப்பியது மட்டுமின்றி ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் மணிஷ் காஷ்யப்.

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி:

வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ள மணிஷ் காஷ்யப் வங்கி கணக்குகளை பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் முடக்கியது. பீகாரில் கைதானவரை தமிழ்நாடு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவல்துறையால் முடக்கப்பட்டுள்ள காஷ்யப்பின் 4 வங்கிக் கணக்குகளில் ரூ.42.11 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காஷ்யப்பின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம், வதந்தி பரப்புவதற்காக வழங்கப்பட்டதா என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை எடுக்க மணிஷ் காஷ்யப்புக்கு உதவியவர்கள் யார் எனவும் காவல்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Migrant workers issue YouTuber Manish Kashyap surrenders before Bihar police புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் திருப்பம்...வதந்தி பரப்பியவர் சரண்..!

இந்நிலையில்  யூடியூபர் மணீஷ் காஷ்யப் பீகார் போலீசாரால் சிறையில் அடைக்கப்பட்டார்.  இவர் மீது மதுரை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிவாரண்ட் அடிப்படையில் தனிப்படை போலீசார் பீகார் சென்று அவரை மதுரை அழைத்து வந்து மாவட்ட நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி டீலா பானு முன்பு பீகார் யூடியூபர் மனீஷ் காஷியப் ஆஜர் படுத்தப்பட்டார். யூடியூபர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஒரே குற்றத்திற்கு பீகார், மதுரை,திருப்பூர் என பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் இவரை முறையாக கைது செய்வதற்கான ஆவணம் சமர்பிக்காமல் காவல்துறை இவரை கைது செய்து அழைத்து வந்து இருக்கிறார்கள். எனவே அவருக்கு பெயில் வழங்க வேண்டும். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கூடாது என கடந்த விசாரணையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 


புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கு: மணீஷ் காஷ்யப்பிற்கு ஏப்ரல் 5 வரை காவல்

அப்போது  அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ”இவர் தவறான வீடியோ பதிவின் மூலம் நாட்டு மக்கள் மத்தியில் இருக்கும் சகோதரத்துவம் சீர்குலைக்கப் பார்க்கிறார். இவரை கைது செய்து போலீசார், விசாரணைக்குட்படுத்தினால் மட்டுமே இவரின் பின்னால் மூளையாக செயல்பட்டவர் யார் என தெரிய வரும்” என்றார். மேலும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப்பிற்கு மார்ச் -30 முதல் ஏப்.3 தேதி வரை 3  நாள்   போலீஸ் காவலில் விசாரணை செய்ய அனுமதி  அளித்து மதுரை மாவட்ட  நீதிமன்ற நடுவர் நீதிபதி  டீலா பானு  உத்தரவு வழங்கினார். இந்நிலையில் தற்போது   ஏப்ரல் 5 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி  உத்தரவிட்டுள்ளார்.


புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கு: மணீஷ் காஷ்யப்பிற்கு ஏப்ரல் 5 வரை காவல்
முக்கிய மான வழக்கு என்பதால்  மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டும் என மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தரப்பு   அரசு  வழக்கறிஞர் சொக்கலிங்கம் நீதிபதிமுன் முறையீடு செய்தார்.
இதனை தொடர்ந்து,  போலீஸ் காவல் நீட்டிப்பு குறித்து, வருகிற புதன் கிழமை (5 ம் தேதி) முடிவு செய்யபடும் என உத்தரவிட்டார்.  எனவே வருகிற 5 ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டீனா பானு உத்தரவிட்டுள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை: நரம்பை உள்ளே வைத்து தைத்ததால் 15 ஆண்டுகள் ஆசிரியைக்கு நரக வேதனை!
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை: நரம்பை உள்ளே வைத்து தைத்ததால் 15 ஆண்டுகள் ஆசிரியைக்கு நரக வேதனை!
மாணவர்களுக்கு வாழ்வியல் நெறி: சங்க இலக்கியம் போதிக்கும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்!
மாணவர்களுக்கு வாழ்வியல் நெறி: சங்க இலக்கியம் போதிக்கும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், மாணவர்கள் இனி நேரடியா படிக்க போறாங்க.. முழு விவரம் !
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், மாணவர்கள் இனி நேரடியா படிக்க போறாங்க.. முழு விவரம் !
மதுரையில் ஜென்சி கிட்ஸ்களுக்கென 7 பயிற்சி மையங்கள் ஒரே இடத்தில் துவக்கம்; புதிய வேலைவாய்ப்பு அகாடமி அறிமுகம்
மதுரையில் ஜென்சி கிட்ஸ்களுக்கென 7 பயிற்சி மையங்கள் ஒரே இடத்தில் துவக்கம்; புதிய வேலைவாய்ப்பு அகாடமி அறிமுகம்

வீடியோ

Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
Chennai Power Cut: சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
2000 Rupee Note: 2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget