மேலும் அறிய

மதுரை: ஆரம்ப சுகாதார நிலையமாக குறைக்கப்பட்ட மருத்துவமனை - சுகாதாரத்துறை பதில்தர உத்தரவு

’’மக்கள் தொகையின் அடிப்படையில் சாப்டூர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் குறைக்கப்பட்டதா? என நீதிபதிகள் கேள்வி’’

மதுரையை சேர்ந்த குருநாதன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், "மதுரை மாவட்டம், சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாப்டூர் கிராமத்தில் 90 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்ததது. பின்னர் சில ஆண்டுகளுக்கு முனு இந்த மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் குறைக்கப்பட்டது.  சாப்டூர் கிராமத்தை சுற்றி20 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 40,000 பேர் உள்ளனர். ஆனால், இந்த மக்கள் தொகைக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர், மருந்து, மாத்திரை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதநால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் 24 மணிநேரமும்  பிரசவம் பார்ப்பதற்கான  மருத்துவரோ, செவிலியரோ, 108 ஆம்புலன்ஸ் வசதியோ இல்லை. மகப்பேறு காலத்தில் பெண்கள் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உசிலம்பட்டிக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் மலையடிவாரத்தில் உள்ள கிராமம் என்பதால் விஷக்கடிக்கான மருந்துகள் இல்லாமல் மக்கள் அனைவரும் மிகவும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
 
ஆகையால், சாப்டூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி 24 மணி நேரமும் தங்கி பணிபுரியக்கூடிய மருத்துவரையும், செவிலியரையும் பணியமர்த்தி, 108 ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு வழக்கு தொடர்பாக மனுதாரர் ஒரு வருடத்திற்கு முன்பே மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார். அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பினர். மேலும் மக்கள் தொகையின் அடிப்படையில் சாப்டூர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் குறைக்கப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து,  மதுரை சுகாதாரத்துறை இணை இயக்குநர், வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget