மேலும் அறிய

மதுரை: ஆரம்ப சுகாதார நிலையமாக குறைக்கப்பட்ட மருத்துவமனை - சுகாதாரத்துறை பதில்தர உத்தரவு

’’மக்கள் தொகையின் அடிப்படையில் சாப்டூர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் குறைக்கப்பட்டதா? என நீதிபதிகள் கேள்வி’’

மதுரையை சேர்ந்த குருநாதன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், "மதுரை மாவட்டம், சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாப்டூர் கிராமத்தில் 90 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்ததது. பின்னர் சில ஆண்டுகளுக்கு முனு இந்த மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் குறைக்கப்பட்டது.  சாப்டூர் கிராமத்தை சுற்றி20 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 40,000 பேர் உள்ளனர். ஆனால், இந்த மக்கள் தொகைக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர், மருந்து, மாத்திரை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதநால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் 24 மணிநேரமும்  பிரசவம் பார்ப்பதற்கான  மருத்துவரோ, செவிலியரோ, 108 ஆம்புலன்ஸ் வசதியோ இல்லை. மகப்பேறு காலத்தில் பெண்கள் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உசிலம்பட்டிக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் மலையடிவாரத்தில் உள்ள கிராமம் என்பதால் விஷக்கடிக்கான மருந்துகள் இல்லாமல் மக்கள் அனைவரும் மிகவும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
 
ஆகையால், சாப்டூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி 24 மணி நேரமும் தங்கி பணிபுரியக்கூடிய மருத்துவரையும், செவிலியரையும் பணியமர்த்தி, 108 ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு வழக்கு தொடர்பாக மனுதாரர் ஒரு வருடத்திற்கு முன்பே மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார். அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பினர். மேலும் மக்கள் தொகையின் அடிப்படையில் சாப்டூர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் குறைக்கப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து,  மதுரை சுகாதாரத்துறை இணை இயக்குநர், வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 LSG vs PBKS: பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ரன் வேட்டை நடத்துவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 LSG vs PBKS: பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ரன் வேட்டை நடத்துவார்களா பண்ட் பாய்ஸ்?
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Cadre Fight | மிரட்டல்..கல்வீச்சு..அடிதடி..அத்துமீறிய விசிக பெண் நிர்வாகி பரபரப்பு காட்சிகள்EPS And OPS Meets Modi: தமிழ்நாடு வரும் மோடி! EPS, OPS போடும் ப்ளான்! பாஜக கூட்டணியில் மாற்றம்?Annamalai BJP : அண்ணாமலை பதவி நீக்கம்? சீனுக்கு வந்த நயினார்! ஆட்டம் காட்டும் அமித்ஷாIrfan Controversy | ”அசிங்கமா இல்லையா..” இழிவுபடுத்திய இர்பான்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 LSG vs PBKS: பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ரன் வேட்டை நடத்துவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 LSG vs PBKS: பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ரன் வேட்டை நடத்துவார்களா பண்ட் பாய்ஸ்?
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
திருச்சிக்கு வரும் Dolby Cinema.. சென்னைக்கு டப் கொடுக்கும் போலயே.. இவ்வளவு வசதிகளா ?
திருச்சிக்கு வரும் Dolby Cinema.. சென்னைக்கு டப் கொடுக்கும் போலயே.. இவ்வளவு வசதிகளா ?
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Siragadikka Aasai: சிறடிக்க ஆசை ஹீரோயின் முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Siragadikka Aasai: சிறடிக்க ஆசை ஹீரோயின் முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கள்ளக்குறிச்சியில் பயங்கரம்... மருத்துவர் வீட்டில் விசிக பெண் நிர்வாகி தாக்குதல்
கள்ளக்குறிச்சியில் பயங்கரம்... மருத்துவர் வீட்டில் விசிக பெண் நிர்வாகி தாக்குதல்
Embed widget