மேலும் அறிய

சிவகங்கை குழந்தை வழக்கு: குழந்தைகள் நல குழு தலைவருக்கு அதிகாரம் இல்லை - நீதிமன்றம்

குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க குழந்தைகள் நல குழு தலைவருக்கு அதிகாரம் இல்லை - மதுரைக்கிளை

சிவகங்கை மாவட்ட தம்பதியினரின் குழந்தையை வாரத்தில் 3 நாள் தந்தையிடமும் 3 நாள் தாயிடமும் இருக்கலாம் என குழந்தைகள் நல குழு தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில்,
குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க குழந்தைகள் நல குழு தலைவருக்கு அதிகாரம் இல்லை என்றும், குழந்தைகள் நல குழு தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
 
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் " நான் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் பவானி என்ற பெண்ணிற்கும் திருமணம் ஆகி 2020 ஆம் ஆண்டு எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் குழந்தையை ஆறு மாதத்தில் இருந்து நானும் எனது பெற்றோர்களுமே வளர்த்து வருகிறோம். இந்நிலையில் எனது மனைவி சிவகங்கை மாவட்டம் குழந்தைகள் நல குழு தலைவரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் எந்த விதமான விசாரணையும் செய்யாமல் குழந்தைகள் நல குழுத்தலைவர் குழந்தையை ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் என்னிடமும், மூன்று நாட்கள் எனது மனைவியும் பார்த்துக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சட்டத்திற்கு புறம்பானது. எனவே குழந்தைகள் நல குழு தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என  குறிப்பிட்டிருந்தார்
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, "குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க குழந்தைகள் நல குழு தலைவருக்கு அதிகாரம் இல்லை. எனவே குழந்தைகள் நலக்குழு தலைவர் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.  இது குறித்து குழந்தைகள் நல குழு தலைவர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
 
 

மற்றொரு வழக்கு
 

தலைப்பு செய்திகள்

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget