மேலும் அறிய
புலிகள் பாதுகாப்பு என அரசிடம் இருந்து பெறும் தொகையை வனத்துறை என்ன செய்கிறது? - நீதிபதிகள் கேள்வி
நுழைவு கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிப்பது குறித்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
பாபநாசம் அகஸ்தியர் அருவி உள்ளூர் பொதுமக்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க தடை விதிக்க உத்தரவிட கோரி வழக்கு.
நுழைவு கட்டணம் வசூலிக்க தடை
அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு, வாகனங்கள் நிறுத்துவதற்கு வனத்துறை சார்பாக பணம் வசூலிக்கப்படுவதற்கு தடை விதிக்க கோரி சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா பொது நல வழக்கு தொடர்ந்தார்.
அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனுவில், ‘திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்' என்ற பெயரில் புகழ்பெற்ற மற்றும் பாரம்பரியமிக்க கோயில் உள்ளது.
புலிகள் காப்பகம் சார்பாக பணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த பகுதி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கே அகஸ்தியர் கோயிலின் அருகே அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு பொதுமக்கள் பக்தர்கள் என பலரும் வந்து குளித்து செல்கின்றனர். மேலும் இந்த பகுதியில் நுழைவதற்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நுழைவு கட்டணம் உள்ளூர் மக்களிடமும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த அருவியில் குளிப்பதற்கு மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கு தமிழ்நாடு வனத்துறை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பாக பணம் வசூலிக்கப்படுகிறது. அருவியில் குளிப்பதற்கு மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கு பணம் வசூல் செய்வது பேரூராட்சி, நகராட்சி அல்லது பஞ்சாயத்து ஆகியோர் மட்டுமே செய்ய வேண்டும். ஆனால், வனத்துறை அலுவலர்கள் இணைந்து மூலம் பணம் வசூல் செய்வது ஏற்கத்தக்கதல்ல. மேலும் நுழைவு கட்டணம் என்பது உள்ளூர் பொதுமக்களிடமும் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அகஸ்தியர் கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கும் உள்ளூர் பொது மக்களுக்கும் நுழைவு கட்டணம் வசூலிப்பதற்கு தமிழ்நாடு வனத்துறை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் டிரஸ்ட் சார்பாக பணம் வசூலிக்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
வனத்துறை என்ன செய்கிறது?
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வனத்துறை தரப்பில் நுழைவு கட்டணம் வசூலிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது நீதிபதிகள் வனத்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் வசூலிப்பது குறித்து எதற்காக வசூலிக்கப்படுகிறது. எதற்காக செலவிடப்படுகிறது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. பொதுவாக நுழைவு கட்டணம் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என உள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாது. வன பாதுகாப்பு புலிகள் பாதுகாப்பு என அரசிடம் இருந்து பெரும் தொகையை வனத்துறை என்ன செய்கிறது. என தெரிவித்த நீதிபதிகள் இதில் வனத்துறை திறப்பில் மீண்டும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் நீதிமன்றம் இது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கும் எனக்கூறி வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மருதா.. மதுரை வீரனா? காவல் தெய்வமாக வணங்கப்படும் இராமநாதபுரம் புடைப்புச் சிற்பம் !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ரேஷன் கடைக்கு வரும் ப்ளுடூத் முறை.. எளிமையாக்க பொட்டல முறையை அமல்படுத்த கோரிக்கை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion