மேலும் அறிய

மருதா.. மதுரை வீரனா? காவல் தெய்வமாக வணங்கப்படும் இராமநாதபுரம் புடைப்புச் சிற்பம் !

இராமநாதபுரம் இராஜசிங்கமங்கலம் அருகில் காவானூரில் 174 ஆண்டுகள் பழமையான  கல்வெட்டு கண்டெடுப்பு.

இராமநாதபுரம் இராஜசிங்கமங்கலம் அருகில் காவானூரில் 174 ஆண்டுகள் பழமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி கால கல்வெட்டு கண்டெடுப்பு.

சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த இயக்குநர் பா.இளங்கோவன் இராமநாதபுரம் இராஜசிங்கமங்கலம் காவானூரில் அவர்களது குலசாமி கோயிலில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா ஆய்வு மேற்கொண்டார்.
 
மதுரைவீரன் சாமி கோயிலில் கல்வெட்டு
 
இதுகுறித்து காளிராசா, "காவானூரில் மதுரைவீரன் சாமி கோயிலில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு கல்வெட்டை வாசித்ததில் 174 ஆண்டுகள் பழமையான 2-ஆம் முத்துராமலிங்க சேதுபதி காலத்திய அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டு என்பது தெரிய வந்தது. நடப்பட்டிருந்த கல்வெட்டில் எழுத்து உள்ள பகுதி மட்டும் துண்டாக உடைந்து கிடக்கிறது.  பின்பகுதியும் அதன் அருகிலேயே கிடக்கிறது. இக்கல்வெட்டில் ஒன்றரை அடி உயரத்தில் ஒரு அடி அகலத்தில் 16 வரிகள் இடம் பெற்றுள்ளன. முதல் இரு வரிகளும் இறுதி வரியும் கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளன.
 
கல்வெட்டு வாசகம்.
 
 ”ஸ்வஸ்தி ஸ்ரீ சாலி வாகன சகாப்தம் 1773ல் விரோத கிருது வருஷம் தை மீ 4 சோமவாரமும் கூடிய சுப திந
காவானூர் மதுரவீர உளி -தூகுபயசிலாக்களும் பிரதிஷ்டை செய்தார் சந்-----கம் விளங்கும்படி சூடியூரம்பலம் வயிரான் -த்த பேறன் கனகு சேமம் பேத்தி மகமாயியும் ட சேமம்பெற்றபடி நயினார்கோவில் முத்துகாத்தபதி செல்வதாக
 
கல்வெட்டுச் செய்தி 
 
ஸ்வஸ்தி ஸ்ரீ என தொடங்கும் இக்கல்வெட்டில் 1851 வது ஆண்டு, விரோத கிருது வருஷம்  தை மாதம் நான்காம் நாள் திங்கள் கிழமை உத்திரட்டாதி நட்சத்திரமும் கூடிய நன்னாளில் காவனூர் மதுரை வீரன் உள்ளிட்டவைக்கு உபயமாக சிலைகளை பிரதிஷ்டை செய்து சந்திரன் சூரியக்காலம் விளங்கும்படி சூடியூர் அம்பலம் வைரான் காத்த பேரன் கனகு பேத்தி மகமாயி சேமம் பெற்றபடி நயினார் கோவில் முத்துகாத்தபதி செல்வதாக என்று எழுதப்பட்டுள்ளது.
 
இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி.
 
கல்வெட்டின் இறுதியில் நயினார் கோவில் முத்துக்காத்தப்பதி என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன, முத்துக்காத்தபதி என்பது இராமநாதபுர ஜமீந்தார் 2-ம் முத்துராமலிங்க சேதுபதியை குறிப்பிடுகிறது, இவர் இராணி பர்வத நாச்சியாரால் தன் வாரிசாக நியமிக்கப்பட்டவர் ஆவார். பெரும் புலவராகவும் தமிழ்ப் புரவலராகவும் விளங்கியவர், இவரது மகன் பாஸ்கர சேதுபதியே விவேகானந்தரை சிகாகோவிற்கு அனுப்பி வைத்த பெருமைக்குரியவர் ஆவார்.
 
மருது சகோதரர்கள்.
 
2 கழுமரம் போன்ற தூண்கள் இக்கோயிலில் மதுரை வீரனாக வணங்கப்பட்டாலும் ஒரே வடிவில் இரண்டு தூண்கள் நடப்பட்டு இரண்டின் கீழ் பகுதியில் மதுரைவீரன் சிற்பம் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. ஒரு தூணை மட்டும் நட்டு வணங்காமல் இரண்டும் ஒரே வடிவில் நடப்பட்டு வணங்கப்படுவதால் அன்றைய சூழலில் நேரடியாக மருது சகோதரர்களை வணங்க முடியாமல் இவ்வாறான ஏற்பாட்டை செய்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. ஊர் மக்கள் இக்கோயிலை ஊர்க்காவல் தெய்வம் என்று வணங்குகின்றனர். ஊர் முழுக்க ஒரே சமூகத்தார் இருந்தாலும் இக்கோவிலை பராமரித்து வரும் குடும்பத்தினர் மருதின் வழியினராக உள்ளனர்.  இக்கோவில் சிவகங்கை மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பா.மனோகரன் அவர்களது குலதெய்வமாகவும் விளங்குகிறது, இதுகுறித்த மேலான தகவலைப் பெற ஊர்மக்களிடம் விசாரித்த போது ஊர் பொது நிகழ்வுகளுக்கு இக்கோவிலில் தேங்காய் உடைத்து வழிபடுவது மரபாக உள்ளதை அறியமுடிந்தது என்று கூறினார்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Israel Attack Gaza: மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...
மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...
அதிகரிக்கும் வெயில்.. மக்களே கட்டாயம் இத பண்ணுங்க - சேலம் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை என்ன?
அதிகரிக்கும் வெயில்.. மக்களே கட்டாயம் இத பண்ணுங்க - சேலம் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை என்ன?
Aadhav Arjuna : “அய்யோ விட்ருங்க – ஆதவை விட்டு விலகும் நபர்கள்” TVK-யில் நடப்பது என்ன..?
Aadhav Arjuna : “அய்யோ விட்ருங்க – ஆதவை விட்டு விலகும் நபர்கள்” TVK-யில் நடப்பது என்ன..?
Dragon Undocked: கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
Embed widget