மேலும் அறிய

"மதுரையில் நேற்றில் இருந்தே மழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு இல்லை" புலம்பும் பெற்றோர்கள்

மழையில் பள்ளிக்கு தனது இரண்டு குழந்தைகளை இறக்கி விட வந்த பெற்றோர், சகதியில் சிக்கி நிலை தடுமாறி விழுந்துள்ளனர்.

Schools Colleges Holiday (27-11-2024): கனமழை எதிரொலியாக தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் விட்டு, விட்டு மழை பெய்துவரும் சூழலில் விடுமுறை அளிக்காதது, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஃபெங்கல் புயல் எதிரொலி:

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறக்கூடும் என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஃபெங்கல் எனப்படும் இந்த புயலால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

எங்கெங்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

அதிகாலை வெளியான அறிவிப்புகளின்படி,  

கல்வி நிலையங்களுக்கு விடுமுறை: கடலூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி மற்றும் தஞ்சாவூர், ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமின்றி புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கனமழை எதிரொலியாக சிதம்பரம் பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு சில பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தின் நிலை என்ன ; மதுரை மாவட்டம் பல்வேறு இடங்களில் நேற்று நல்ல மழை பெய்தது. தொடர்ந்து விட்டு, விட்டு மாலைக்கு மேல் வரை மழை தொடர்ந்தது. நேற்று மாலை பள்ளி முடிந்து வெளியில் வந்த மாணவர்கள் பெரும்பாலும் மழையில் நனைந்தபடியே வீட்டுக்குச் சென்றனர். இரவில் இருந்து தூரல் விழுந்து கொண்டு தான் இருக்கின்றது.

இன்று 27-ம் தேதி காலையில் கூட லேசான மழை பெய்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பள்ளிக்கு மட்டும் கூட விடுமுறை அளிக்கவில்லை. இதற்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலையில், தற்போது உள்ள மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து மழை காலங்களில் கூட பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை, மாணவர்களை பாதுகாப்பதில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களால் பெரும் புகாராக எழுந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் காய்ச்சல், சளி போன்ற நோய் தொற்றுகள் பரவி வரும் சூழலில் இதுபோன்ற சூழலில் வளர் பருவத்தினர் அதிகம் கூடும் இடமான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாதது பெற்றோர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சகதியில் சிக்கிய பெற்றோர் மற்றும் குழந்தைகள்

மதுரை வில்லாபுரம் ஆர்ச் பகுதியில் தனியார் பள்ளியில் தனது இரண்டு குழந்தைகளை இறக்கி விட பைக்கில் வந்த பெற்றோர், சகதியில் சிக்கி நிலை தடுமாறி விழுந்துள்ளனர். இன்று பள்ளிக்கு விடுமுறையே விட்டிருக்கலாம் என புலம்பிக்கொண்டே சென்றார். இப்படி மாவட்டத்தில் பல இடங்களில் பெற்றோர் மற்றும் குழந்தைகள் நொந்துகொண்டுள்ளனர்.
 
மதுரை மாவட்ட நிர்வாகத்தில் குழப்பம்?
 
மதுரை மாவட்ட பள்ளிக் கல்வித்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையே ஆரோக்கியமான தகவல் பரிமாற்றம் இல்லையா? அல்லது மாவட்ட ஆட்சியர் சங்கீதா முடிவுகளை எடுப்பதில் தடுமாறுகிறாரா? என்ற எந்தேகம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
 

தலைப்பு செய்திகள்

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
வைப்பாறுக்கு உயிர் கொடுத்த சாத்தூர்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைப் பணி துவக்கம் !
வைப்பாறுக்கு உயிர் கொடுத்த சாத்தூர்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைப் பணி துவக்கம் !
உசிலம்பட்டி அரசியல் அதிரடி: அதிமுக, திமுகவினர் தவெகவில் இணைந்தனர்!
உசிலம்பட்டி அரசியல் அதிரடி: அதிமுக, திமுகவினர் தவெகவில் இணைந்தனர்!
ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம்: இளம்பெண்கள், தலித்துகளை காக்க முதலமைச்சருக்கு - கதிர் அவசர கோரிக்கை!
ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம்: இளம்பெண்கள், தலித்துகளை காக்க முதலமைச்சருக்கு - கதிர் அவசர கோரிக்கை!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Embed widget