மேலும் அறிய

"மதுரையில் நேற்றில் இருந்தே மழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு இல்லை" புலம்பும் பெற்றோர்கள்

மழையில் பள்ளிக்கு தனது இரண்டு குழந்தைகளை இறக்கி விட வந்த பெற்றோர், சகதியில் சிக்கி நிலை தடுமாறி விழுந்துள்ளனர்.

Schools Colleges Holiday (27-11-2024): கனமழை எதிரொலியாக தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் விட்டு, விட்டு மழை பெய்துவரும் சூழலில் விடுமுறை அளிக்காதது, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஃபெங்கல் புயல் எதிரொலி:

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறக்கூடும் என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஃபெங்கல் எனப்படும் இந்த புயலால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

எங்கெங்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

அதிகாலை வெளியான அறிவிப்புகளின்படி,  

கல்வி நிலையங்களுக்கு விடுமுறை: கடலூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி மற்றும் தஞ்சாவூர், ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமின்றி புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கனமழை எதிரொலியாக சிதம்பரம் பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு சில பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தின் நிலை என்ன ; மதுரை மாவட்டம் பல்வேறு இடங்களில் நேற்று நல்ல மழை பெய்தது. தொடர்ந்து விட்டு, விட்டு மாலைக்கு மேல் வரை மழை தொடர்ந்தது. நேற்று மாலை பள்ளி முடிந்து வெளியில் வந்த மாணவர்கள் பெரும்பாலும் மழையில் நனைந்தபடியே வீட்டுக்குச் சென்றனர். இரவில் இருந்து தூரல் விழுந்து கொண்டு தான் இருக்கின்றது.

இன்று 27-ம் தேதி காலையில் கூட லேசான மழை பெய்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பள்ளிக்கு மட்டும் கூட விடுமுறை அளிக்கவில்லை. இதற்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலையில், தற்போது உள்ள மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து மழை காலங்களில் கூட பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை, மாணவர்களை பாதுகாப்பதில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களால் பெரும் புகாராக எழுந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் காய்ச்சல், சளி போன்ற நோய் தொற்றுகள் பரவி வரும் சூழலில் இதுபோன்ற சூழலில் வளர் பருவத்தினர் அதிகம் கூடும் இடமான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாதது பெற்றோர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சகதியில் சிக்கிய பெற்றோர் மற்றும் குழந்தைகள்

மதுரை வில்லாபுரம் ஆர்ச் பகுதியில் தனியார் பள்ளியில் தனது இரண்டு குழந்தைகளை இறக்கி விட பைக்கில் வந்த பெற்றோர், சகதியில் சிக்கி நிலை தடுமாறி விழுந்துள்ளனர். இன்று பள்ளிக்கு விடுமுறையே விட்டிருக்கலாம் என புலம்பிக்கொண்டே சென்றார். இப்படி மாவட்டத்தில் பல இடங்களில் பெற்றோர் மற்றும் குழந்தைகள் நொந்துகொண்டுள்ளனர்.
 
மதுரை மாவட்ட நிர்வாகத்தில் குழப்பம்?
 
மதுரை மாவட்ட பள்ளிக் கல்வித்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையே ஆரோக்கியமான தகவல் பரிமாற்றம் இல்லையா? அல்லது மாவட்ட ஆட்சியர் சங்கீதா முடிவுகளை எடுப்பதில் தடுமாறுகிறாரா? என்ற எந்தேகம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆஹா விருதுநகர் மக்களே.. உங்களுக்கு தான் இந்த அப்டேட் - “8 கி.மீ சுகாதார நடைபாதை” ஆரோக்கியத்தின் ரகசியம் இதோ!
ஆஹா விருதுநகர் மக்களே.. உங்களுக்கு தான் இந்த அப்டேட் - “8 கி.மீ சுகாதார நடைபாதை” ஆரோக்கியத்தின் ரகசியம் இதோ!
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
மதுரையில் இனி தூசி தொல்லை கொஞ்சம் குறையும்... மாநகராட்சிக்கு புதிய மண் கூட்டும் இயந்திரம் வந்திருக்கு !
மதுரையில் இனி தூசி தொல்லை கொஞ்சம் குறையும்... மாநகராட்சிக்கு புதிய மண் கூட்டும் இயந்திரம் வந்திருக்கு !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget