மேலும் அறிய

வைகையின் இந்த நிலைக்கு இவர்கள்தான் காரணம் - நீதிபதிகள் யாரை சொன்னார்கள்?

கழிவு நீர் கலப்பது குப்பைகள் கொட்டுவது அவ்வப்போது கண்டுபிடித்து அபராதம் விதித்திருந்தால் வைகையின் இந்த நிலை உருவாகி இருக்காது என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு  நீதிபதிகள் கருத்து.

வைகை ஆறு மாசுபடுவதை கட்டுப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு  நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளது.
 
மாசுபடும் வைகை ஆறு
 
வைகை ஆறு மாசுபடுவது குறித்தும் வைகையில் கழிவு நீர் கலப்பது குப்பைகள் கொட்டுவது குறித்தும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தாமாக முன்வந்து  வழக்கு பதிவு செய்து கடந்த ஆண்டு முதல் விசாரணை செய்து வருகிறது. வைகை ஆறு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக சென்று கடலில் கலக்கிறது. சுமார் 295 கிலோ மீட்டர் பயணிக்கும் வைகை ஆற்றங்கரையில் தேனி, மதுரை, ராமநாதபுரம் பகுதியில் கழிவுநீர் கலக்கிறது. மழைநீர் வடிகால் அனைத்தும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டன. வைகை ஆற்றின் நீர் அசுத்தம் அடைந்து இருப்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது. வைகை ஆற்றின் நிலையை கருத்தில் கொண்டு தேனி முதல் ராமநாதபுரம் வரை பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் சிறப்பு குழு அமைத்து, நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நீதிமன்றம் முன் வந்து விசாரணை செய்து வந்தது.
 
மாசு கட்டுப்பாட்டு வாரியம் வைகை அணையை பாதுகாக்க தவறுகின்றது
 
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வைகை அணையை பாதுகாக்க தவறுகின்றது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில் ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை கண்டறிந்து அபராதம் விதித்திருக்க வேண்டும். அப்படி அபராதம் விதித்திருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அவர்களது நிதியையோ அல்லது ஆற்றில் கழிவு நீர் கலக்கும் நபர்களிடமிருந்து அபராதத்தையோ வசூல் செய்து கட்டி இருப்பார்கள். மாசு கட்டுப்பாட்டு வாரியம் அபராதம் விதித்திருந்தால் தற்போதைய நிலை வந்திருக்காது. பொதுப்பணித்துறையினர் ஆறுகளில் மண் அள்ளுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றார்கள். ஆறுகளை பாதுகாக்கவோ கண்காணிக்கவோ தேவையான எந்த நடவடிக்கையையும் பொதுப்பணித்துறை செய்வதில்லை.
 
நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 
இந்த வழக்கு குறித்து 5 மாவட்டத்தை சேர்ந்த அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் தனித்தனியே தற்போதைய நிலை குறித்தும் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பது குறித்தும் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். நீர்நிலை  மக்களுக்கான சொத்து. இதில் அரசியல் பார்க்க வேண்டாம். வைகை ஆற்றை பாதுகாக்க மாநில அரசு திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் ஏன் கொடுக்கவில்லை. அவ்வாறு திட்ட அறிக்கை கொடுத்திருந்தால் அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட தயாராக உள்ளது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
Baba Vanga Predictions 2026: “ஏஐ, இயந்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும்“; 2026-ல் ஆபத்து; பாபா வங்கா கணித்தது என்ன.?
“ஏஐ, இயந்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும்“; 2026-ல் ஆபத்து; பாபா வங்கா கணித்தது என்ன.?
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
Baba Vanga Predictions 2026: “ஏஐ, இயந்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும்“; 2026-ல் ஆபத்து; பாபா வங்கா கணித்தது என்ன.?
“ஏஐ, இயந்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும்“; 2026-ல் ஆபத்து; பாபா வங்கா கணித்தது என்ன.?
Tamilan : ‘அடக்குனா அடங்குற ஆளா நீ’ யாரு டா அடிமை? – லண்டனில் போராடி வென்ற தமிழர்..!
‘அடக்குனா அடங்குற ஆளா நீ’ யாரு டா அடிமை? – லண்டனில் போராடி வென்ற தமிழர்..!
Old pension scheme : மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.? புத்தாண்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வருமா குஷியான அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.? புத்தாண்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வருமா குஷியான அறிவிப்பு
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
Embed widget