மேலும் அறிய

Madurai Hc: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்பிற்கு நீதிபதிகள் எச்சரிக்கை! என்ன விஷயம்?

முன்னாள் அமைச்சர் விரும்பினால் மாட்டுத்தாவணி  சாலையில் இரு புறம் உள்ள  நிலங்களை வாங்கி அரசுக்கு ஒப்படைத்து  நுழைவாயிலை பாதுகாத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கலாமே - நீதிபதிகள் யோசனை.

மதுரை மாட்டுத்தாவணி எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் நுழைவாயிலை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட கோரிய வழக்கு. வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல். ஆர்.பி.உதயகுமார் தரப்பிற்கு நீதிபதிகள் எச்சரிக்கை.
 
நக்கீரர்  நுழைவாயிலை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கு
 
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே  போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மிகவும் பழமை  வாய்ந்த நக்கீரர்  நுழைவாயிலை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கு. இதனை மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் "மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் தோரண நுழைவு வாயில் எனும் பெயரில் பழமையான அலங்கார வளைவு கட்டப்பட்டுள்ளது. தற்போதைய போக்குவரத்து நெரிநெரிசலால், அந்த பகுதியில் ஏராளமான விபத்துக்கள் நிகழ்வதோடு, போக்குவரத்து அதிக நெரிசல் ஏற்படவும் காரணமாகிறது. ஆகவே மதுரை மாட்டுத்தாவணி  பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் நுழைவு வாயிலை இடித்து. அகற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
ஆர்.பி.உதயகுமார் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல்
 
இந்த வழக்கு  மீண்டும் நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது “இந்த வழக்கில் மாட்டுத்தாவணி எதிரே உள்ள நக்கீரர் நுழைவாயில் உலக தமிழ்ச் சங்கம் நடைபெற்றதை, நினைவு கூறும் வகையில்  நினைவு சின்னமாக வைக்கப்பட்டது.  இதுபோல் மதுரையை சுற்றி உள்ள அனைத்து நுழைவாயில்களும் வரலாற்று நினைவு கூறு வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் அந்த தகவல் தெரியாமல் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் என்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொள்ள வேண்டும். என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணையின் போது முன்னால் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
 
கோபமடைந்த நீதிபதிகள்
 
அப்பொழுது கோபமடைந்த நீதிபதிகள் கடந்த 20 வருடங்களாக போக்குவரத்துக்கு இடையூறாக இந்த நுழைவாயில் உள்ளது. அதை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட்டால் மனுதாரர் இணையீட்டு மனு தாக்கல் செய்வது அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார். தமிழே தெரியாமல் தமிழகத்தில் பலர் இருக்கக்கூடிய நிலையில் தமிழ்ச்சங்கம் நினைவாக நுழைவாயில் வைக்கப்பட்டுள்ளது. என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் அந்த நுழைவாயிலை மனுதாரர் பாதுகாக்க நினைத்தால் மாட்டுத்தாவணி எதிரே இருபுற சாலைகளிலும் உள்ள இடங்களை அவரது சொந்த பணத்தில் விலைக்கு வாங்கி அரசுக்கு ஒப்படைக்கலாம் என்று கூறிய நீதிபதிகள் மனுதாரர் மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.
 
புதிய பெரிதான நுழைவாயில் கட்டலாம்
 
ஆர்.பி.உதயகுமார் தரப்பில் திங்கள்கிழமை ஒத்தி வைத்தால் உரிய ஆவணங்களை தாக்கல் செய்வதாக தெரிவித்தனர். அப்போது எச்சரிக்கை செய்த நீதிபதிகள் வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர். மேலும் மனுதாரருக்கு அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கையும் செய்தனர். மேலும் மதுரையில் போக்குவரத்து மிகுந்த நெரிசலில் உள்ள கே.கே நகர் “பெரியார் நுழைவாயில்” மற்றும் மாட்டுத்தாவணி “நக்கீரர் நுழைவாயில்” ஆகிய இரண்டையும் இடித்துவிட்டு அதே பெயரில் புதிய பெரிதான நுழைவாயில் கட்டலாம் என தெரிவித்து வழக்கு விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget