மேலும் அறிய

”வீட்டுக்கு பின்னாடி தோண்டத் தோண்ட தங்கம், வெள்ளி கிடைச்சுருக்கு” : சுதாரித்த மதுரைக்காரர்

வீடு கட்ட குழி தோண்டியபோது 3 கிலோ தங்கமும் வெள்ளியும் புதையல் கிடச்சுருக்கு யார்டயும் சொல்லிடாதங்க.. நூதன முறை மோசடியை தொடங்கிய கும்பல்.. ஓ.டி.பி மோசடி கும்பலின் புதிய புரட்டை நம்பி ஏமாந்துடாதீங்க..

வளர்ச்சியில் டிஜிட்டல்

இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் மேம்பட்ட நிலையில் அதன் மூலமாக நடைபெறும் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக செல்போன்களில் ஏ.டி.எம் கார்டு என ஓ.டி.பி எண்களை கேட்பது, வங்கியில் இருந்து பேசுவதாக கூறுவது, அதிர்ஷ்ட கூப்பன் என சொல்லி பேசுவது, என நாளுக்கு நாள் மோசடி கும்பல்களின் எண்ணிக்கைகள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் புதிய யுக்தியாக மோசடி கும்பல் ஒன்று சில செல்போன் எண்களை எடுத்து புதையல் கிடைத்துள்ளதாக கூறி, பணம் கேட்டு மோசடியில் ஈடுபடும் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

மோசடி செய்ய வலைவீச்சு

 மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சங்கரபாண்டி. இவரை, தொடர்புகொண்ட மோசடி கும்பல் அவரிடம் பேசத் தொடங்கியவுடன் “5 மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டிற்கு வந்தபொழுது உங்களிடம் என்னுடைய செல்போன் எண்ணை கொடுத்தேன். ஞாபகம் இருக்கிறதா?” என பாசமாக உருகி பேசியிருக்கின்றனர்.

மேலும் ”வீட்டில் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா? கர்நாடகாவில் எனக்குத் தெரிந்த தாத்தா பாட்டி ஒருவர் வீடு கட்டி வருகிறார்கள். அந்த வீடு கட்டும் பணியின்போது கிடைத்த புதையலில் வெள்ளி மற்றும் 3 கிலோ தங்கக் காசுகளும் கிடைத்துள்ளது. விலை உயர்ந்த அந்த பொருட்களை விற்று தருமாறு என்னிடம் கேட்டனர். அப்போது தமிழகத்தில் எனக்குத் தெரிந்த அண்ணன் இருக்கிறார். அவர் மூலமாக விற்று தருகிறேன் எனக் கூறி உங்களுக்கு போன் செய்துள்ளேன். நீங்கள் நேரடியாக வந்து அந்த தங்கத்தையும், வெள்ளியையும் வாங்கிக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட பணத்தை கொடுத்து வாங்கிவிட்டு நீங்கள் உண்மையான நகையா என டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு முழுமையாக வாங்கிக் கொள்ளலாம். தயவுசெய்து இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் தட்டுத் தடுமாறி அரைகுறை தமிழில் மோசடி கும்பல் பேசியுள்ளது. அந்த மோசடி கும்பலானது எப்படியாவது ஏமாற்றி பணத்தை பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக ஆர்வலரிடம்  பேசியதை புரிந்து கொண்ட சமூக ஆர்வலர் இன்னும் ஒரு மணி நேரத்தில் தங்களை தொடர்பு கொள்வதாக கூறி துண்டித்து விட்டார்.

மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து அந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது எந்தவித ரெஸ்பான்ஸும் இல்லை. செக் தி நம்பர் என்று சொல்லியுள்ளது.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

”இப்படியாக புதையல் எனக்கூறி புதிய வகையில் மோசடிகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளது, மோசடி கும்பல். எனவே, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையாகவும்,  பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். எனவும், இதுபோன்று தெரியாத நபர்களிடம் புதையல் என ஏதேனும் மோசடி தொலைபேசி அழைப்புகள் வந்தால் யாரும் நம்பி ஏமாந்து விட வேண்டாம் எனவும், இதுகுறித்து சைபர்கிரைம்  காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, இது போன்ற மோசடிகள் தொடங்குவதற்கு முன்பே தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என சமூக ஆர்வலர் சங்கர பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - நாய் கடித்த கறியை மீண்டும் கழுவி விற்பனை செய்த கடைக்காரர்; சிசிடிவி காட்சியால் சர்ச்சை

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு வாழ்வியல் நெறி: சங்க இலக்கியம் போதிக்கும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்!
மாணவர்களுக்கு வாழ்வியல் நெறி: சங்க இலக்கியம் போதிக்கும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், மாணவர்கள் இனி நேரடியா படிக்க போறாங்க.. முழு விவரம் !
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், மாணவர்கள் இனி நேரடியா படிக்க போறாங்க.. முழு விவரம் !
மதுரையில் ஜென்சி கிட்ஸ்களுக்கென 7 பயிற்சி மையங்கள் ஒரே இடத்தில் துவக்கம்; புதிய வேலைவாய்ப்பு அகாடமி அறிமுகம்
மதுரையில் ஜென்சி கிட்ஸ்களுக்கென 7 பயிற்சி மையங்கள் ஒரே இடத்தில் துவக்கம்; புதிய வேலைவாய்ப்பு அகாடமி அறிமுகம்
சிவகங்கை கொல்லங்குடியில் 170 பேருக்கு ரூ.36.72 லட்சம் நலத்திட்ட உதவிகள்!
சிவகங்கை கொல்லங்குடியில் 170 பேருக்கு ரூ.36.72 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Embed widget