மேலும் அறிய

மதுரை : விலங்குகள் மீது தொடரும் கொடூர வன்முறை : கடுமையாக எச்சரித்த ஆட்சியர்..!

விலங்குகள் மீது துன்புறுத்தல் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கால்நடைகள் மீதான வன்முறை தாக்குதல் என்பது தொடர்ந்து அதிகரிப்பதாக புகார்கள் எழுந்தது. மதுரை நகர் பகுதியில் இருந்து அழகர்கோயில் செல்லும் சாலையில் தல்லாக்குளம், கே.புதூர், சூர்யா நகர்பகுதிகளும் மற்றும் ஆனையூர், கண்ணனேந்தல், அய்யர்பங்களா என நகர் சுற்றுவட்டார பகுதிகளிலும்  சாலையில் செல்லும் பசு மாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் மீது இரவு நேரங்களில் மர்ம நபர்கள்  அதிக திறன் கொண்ட ஆசிட் மற்றும் சூடான எண்ணெய் போன்ற திரவங்களை ஊற்றுவதால், மாடுகள் படுகாயமடைந்து சாலையில் ரத்த காயங்களுடன் சுற்றித்திரியும் அவல நிலை ஏற்பட்டது.
 

மதுரை : விலங்குகள் மீது தொடரும் கொடூர வன்முறை : கடுமையாக எச்சரித்த ஆட்சியர்..!
 
இது குறித்த செய்தி வெளியான பின் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிலையில் இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில்," மதுரையில் சில இடங்களில் விலங்குகள் மீது பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் நடைபெறுவது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தும் நபர்கள் மீது, விலங்குகள் வதைத்தடுப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்படும்.  பின் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளுக்கும் எடுக்கப்படும்.
 
மதுரை ;  'அப்போ மயில்கள், இப்போ மாடுகள்’  - வாயில்லா ஜீவன்கள் மீது ஆசிட் வீச்சு!
 
விலங்குகளின் அடிப்படை உரிமைகளைப் பறித்து அதனை துன்புறுத்தும் விதமாக அடித்தல், காயங்கள் ஏற்படுத்துதல், அல்லது காயங்கள் ஏற்பட காரணமாய் இருத்தல், வாகனங்கள் மூலம் மோதி விபத்து ஏற்படுத்துதல், விஷம் வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது விலங்கு வதை சட்டத்தின் உட்பட்டும். மேலும், அடிப்படை வசதிகள் இன்றி பாதுகாப்பற்ற முறையில் விலங்குகளை வாகனங்களில் ஏற்றி இறக்குதல், விலங்குகள் நலவாரியத்தின் விதிகளை மீறி வாகனங்களில் விலங்குகளை கொண்டு சென்றால் விலங்குகளை ஏற்றிச் செல்லும் வாகன உரிமையாளர், விலங்கு உரிமையாளர் மற்றும் வாகன ஓட்டுநர் ஆகியோர் மீதும் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படும்" என எச்சரித்துள்ளார்.
 
 
மதுரை : விலங்குகள் மீது தொடரும் கொடூர வன்முறை : கடுமையாக எச்சரித்த ஆட்சியர்..!
மேலும் சமூக ஆர்வலர்கள் சிலர், "எந்த தவறும் செய்யாத வாயில்லா ஜீவன்கள் மீது ஆசிட் வீசிய சம்பவம் கொடூரத்தின் உச்சம். எனவே இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் கண்காணித்து அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும். அப்போது தான் வரும் காலங்களில் இது போன்ற செயல்களை தவிர்க்க முடியும்" என்றனர்
 
மதுரையின் நேற்றைய கொரோனா அப்டேட் தெரியுமா ? -TN Corona Update: மதுரையில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு; 12 பேர் உயிரிழப்பு!
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Indian 2 Trailer: இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
Embed widget