மேலும் அறிய

மதுரையில் மழைபெய்யும் போது  பற்றி எரியும் கார்கள்; உயிர் தப்பிய பயணிகள்

மதுரை மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது  கார் திடிரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

மதுரையில் ஒரு வாரத்திற்குள் இரு கார்கள் தீ விபத்தில் முழுவதுமாக எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவு பற்றியெரிந்த கார்
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜம்புகேஸ்வரன் என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் சிவகாசி சென்றுவிட்டு மதுரைக்கு வந்துள்ளனர். இந்நிலையில்  நேற்று நள்ளிரவு  மதுரை மாநகர் கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி மேம்பாலத்தில் கார் சென்றபோது திடீரென காரின் முன்பகுதியில் புகை வெளியேற தொடங்கியுள்ளது. இதனையடுத்து காரில் இருந்தவர்கள் கீழே இறங்கிய சில நிமிடங்களுக்கு கார் தீப்பற்ற தொடங்கி மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் மேம்பாலத்தில் சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து கார் முழுவதும் தீ பரவ தொடங்கியதால் தீ பிளம்பு புகையுடன் வானுயர அளவுக்கு எரிந்தது. மேம்பாலத்தில் சென்ற கார் தீப்பற்றியதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
 
விளக்குத்ததூண் காவல்துறையினர் விசாரணை
 
பின்னர் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தீயணைப்புதுறையினருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் முழுமையாக எரிந்து இரும்பு கூடு  போல மாறியது. காரில் ஏற்பட்ட தீ்விபத்தின் போது பெட்ரோல், ஏசி போன்றவை எரிந்தபோது வெடிக்க தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேம்பால பகுதி என்பதால் தீயை அணைக்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் யாரும் அருகில் கூட செல்ல முடியாத அளவிற்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இது குறித்து விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வாகனத்தில் ஏற்பட்ட பேட்டரி  தீப்பிடித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையின் பழமை வாய்ந்த நூற்றாண்டு ஏவி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக யாரும் காயமின்றி தப்பினர்.
 
கொட்டும் மழையின் நடுவே கார் எரிந்தது
 
மதுரையில் கடந்த வாரத்தில் கொட்டும் மழையின் நடுவே நத்தம் பறக்கும் பாலத்தின் கீழ் சாலையில் சென்ற  கார் ஒன்று தீப்பற்றி முழுவதும் எரிந்த நிலையில் நேற்றிரவும் மீண்டும் கோரிப்பாளைய மேம்பாலத்தில் சாரல் மழை பெய்தபோதே கார் தீப்பற்றி எரிந்தது. மதுரையில் ஒரு வாரத்திற்குள் இரு கார்கள் தீ விபத்தில் முழுவதுமாக எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆணையாளர் அதிரடி ஆய்வு: தூய்மை, சுகாதாரம் உறுதி செய்ய உத்தரவு!
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆணையாளர் அதிரடி ஆய்வு: தூய்மை, சுகாதாரம் உறுதி செய்ய உத்தரவு!
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: தனித்துவமான வடிகால் அமைப்பு கண்டெடுப்பு!
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: தனித்துவமான வடிகால் அமைப்பு கண்டெடுப்பு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
சூரி சகோதரர் லட்சுமணன் அண்ணாமலையின் - 'வீ த லீடர்' அமைப்பில் Entry? மதுரை அரசியிலில் பரபரப்பு!
சூரி சகோதரர் லட்சுமணன் அண்ணாமலையின் - 'வீ த லீடர்' அமைப்பில் Entry? மதுரை அரசியிலில் பரபரப்பு!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TTV Statement : விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலி கடிதம்.! என் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க- சீறிய டிடிவி
விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலி கடிதம்.! என் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க- சீறிய டிடிவி
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
Embed widget