Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
தெறி படத்தில் தனது மகள் நைனிகாவுடன் நடித்த விஜய் பாவம் என்று சுவாரஸ்யமான அனுபவத்தை மீனா பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திர நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தெறி. இந்த படத்தில் விஜய்க்கு மகளாக நைனிகா நடித்திருப்பார். இவர் பிரபல நடிகை மீனாவின் மகள்.
இந்த படத்தின்போது விஜய் - நைனிகா பற்றி மீனா நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
விஜய் பாவம்:
அப்போது எல்லாம் ஒன்னுமே தெரியாது. விஜய் யாருனே அவங்களுக்குத் தெரியாது. பர்ஸ்ட் டைம் ஷுட்டிங்கில் பைக் சீன். இவ அவர்கிட்ட இன்டர்வியூ பண்றா. பைக் ஓட்டத் தெரியுமா? ஓட்டிக்காட்டுங்க. நான் சொல்றேன் நைனிகா அமைதியா இருங்க. பேசாம ஷாட் பண்ணுங்க.
அதுக்கு அவ அவருக்கு வண்டி ஓட்டத் தெரியுமா? தெரியாதா?னு எனக்கு தெரியனும். பாவம் அவரு. அவர் போயி ஒரு ரவுண்ட் சுத்திட்டு வந்து இப்போ போலமாமா? பாவம்.
இவ்வாறு அவர் கூறியிருப்பார்.
விஜய்யுடன் நடிக்காத மீனா:
ரஜினி, கமல், அஜித், கார்த்திக், சத்யராஜ், பிரபு, பிரபுதேவா என தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால், விஜய்யுடன் மட்டும் இவர் கதாநாயகியாக நடிக்கவில்லை. விஜய்யுடன் மீனா நடிக்காவிட்டாலும் ஷாஜகான் படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருப்பார். சரக்கு வச்சுருக்கேன் என்ற இந்த பாடல் மிகப்பெரிய வெற்றிப்பாடலாக அமைந்தது.
தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டிப் பறந்த கதாநாயகி மீனா. குழந்தை நட்சத்திரமாகி பிரபல கதாநாயகியாக உலா வந்தவர். இவர் விஜய்யுடன் நடிக்காவிட்டாலும் இவரது மகள் விஜய்யுடன்தான் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் - நைனிகா காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
அட்லீ இயக்கிய இந்த படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்திற்கு பிறகு நைனிகா வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது அவர் படிப்பில் கவனம் செலுத்துகிறார். தெறி படத்தின் படப்பிடிப்பின்போது நடிகை மீனாவும் தனது மகளின் காட்சியின்போது உடனிருந்தார். நடிகையான அவர் தனது மகளுக்கு எந்தெந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் நைனிகாவிற்கு கற்றுக்கொடுப்பதில் பக்கபலமாக இருந்தார்.






















