மேலும் அறிய

மதுரையில் நள்ளிரவில் நடந்த விபத்து; சாரம் சரிந்து விழுந்து 4 பேர் காயம்

பாலம் உள்ளிட்ட பெரிய கட்டுமானங்களின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் - என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

பாலம் அமைக்கும் பணியின் போது நள்ளிரவில் சாரம் சரிந்து விழுந்ததில், 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் போக்குவரத்தை குறைக்க பாலங்கள்

மதுரை மாநகருக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில வருடங்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மாட்டுத்தாவணி, காளவாசல், நெல்பேட்டை, கோரிப்பாளையம், அண்ணா பேருந்துநிலையம், பால்பண்ணை சிக்னல், தெப்பக்குளம் பகுதி, அய்யர்பங்களா என பல இடங்களில் வாகனங்கள் அடிக்கடி ஊர்ந்து செல்லும் காட்சியை தான் பார்க்க முடிகிறது. போக்குவரத்தி நெரிசலை குறைக்க பல இடங்களில், பாலம் கட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக நத்தம் பாலம், காளவாசல் பைப்பாஸ் பாலம், வைகை ஆற்றில் புதிய பாலம் என பல பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பலோ சிக்னல் - பால்பண்ணை சிக்னல் வழியாகவும், தமுக்கம் முதல் கோரிப்பாளையம் வழியாக வைகை ஆற்றை கடக்கும்வரை பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோரிப்பாளையம் பாலம் பகுதியில் கட்டப்பட்டுவரும் பாலத்தின் சாரம் சரிந்ததில் 4 தொழிலாளர்கள் காயம் ஏற்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நத்தம் பாலம் கட்டுமான பணியின் போது தொழிலாளர் ஒருவர் இறந்த சூழலில் தற்போது கோரிப்பாளையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ

4 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சை
 
சுமார் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை கோரிப்பாளையம் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. தல்லாகுளம் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் இணைப்பு பாலம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 200 அடிக்கு மேல் சாரம் விழுந்து விபத்து ஏற்பட்டது. சிமெண்ட் கலவை ஊற்றும் பணியின் போது பாரம் தாங்காமல் இரும்பு சாரம் விழுந்ததில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் கீழே விழுந்ததில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். தொடர்ச்சியாக பெய்த மழையினால் அப்பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக காணப்பட்டு வரும் நிலையில் இரும்பு சாரம் அமைக்கப்பட்ட பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. பாலம் ஸ்டேஷன் ரோட்டில்  பாலம் அமைக்கும் பணியின் போது நள்ளிரவில் சாரம் சரிந்து விழுந்ததில் ஜெபராஜ், அய்யங்காளை, பழனிசாமி, பூவழகன் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். 4 பேரும் மீட்க்கப் பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
 
பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
 
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்...,” மதுரையில் ஏற்கனவே நத்தம் பாலம் கட்டுமான பணியின் போது தொழிலாளி ஒருவர் இறந்தார். பொறியாளர்களுக்கு கீழ்நிலையில் கண்காணிக்க கூடிய நபர்களை பணி அமர்த்தி, வேலை நடக்கும் போது பார்வையிட வைக்க வேண்டும். அப்போது தான் தவறுகள் ஏதும் நடக்காமல், விபத்து போன்றவை தவிர்க்கப்படும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget