மேலும் அறிய

மதுரையில் நள்ளிரவில் நடந்த விபத்து; சாரம் சரிந்து விழுந்து 4 பேர் காயம்

பாலம் உள்ளிட்ட பெரிய கட்டுமானங்களின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் - என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

பாலம் அமைக்கும் பணியின் போது நள்ளிரவில் சாரம் சரிந்து விழுந்ததில், 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் போக்குவரத்தை குறைக்க பாலங்கள்

மதுரை மாநகருக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில வருடங்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மாட்டுத்தாவணி, காளவாசல், நெல்பேட்டை, கோரிப்பாளையம், அண்ணா பேருந்துநிலையம், பால்பண்ணை சிக்னல், தெப்பக்குளம் பகுதி, அய்யர்பங்களா என பல இடங்களில் வாகனங்கள் அடிக்கடி ஊர்ந்து செல்லும் காட்சியை தான் பார்க்க முடிகிறது. போக்குவரத்தி நெரிசலை குறைக்க பல இடங்களில், பாலம் கட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக நத்தம் பாலம், காளவாசல் பைப்பாஸ் பாலம், வைகை ஆற்றில் புதிய பாலம் என பல பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பலோ சிக்னல் - பால்பண்ணை சிக்னல் வழியாகவும், தமுக்கம் முதல் கோரிப்பாளையம் வழியாக வைகை ஆற்றை கடக்கும்வரை பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோரிப்பாளையம் பாலம் பகுதியில் கட்டப்பட்டுவரும் பாலத்தின் சாரம் சரிந்ததில் 4 தொழிலாளர்கள் காயம் ஏற்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நத்தம் பாலம் கட்டுமான பணியின் போது தொழிலாளர் ஒருவர் இறந்த சூழலில் தற்போது கோரிப்பாளையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ

4 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சை
 
சுமார் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை கோரிப்பாளையம் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. தல்லாகுளம் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் இணைப்பு பாலம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 200 அடிக்கு மேல் சாரம் விழுந்து விபத்து ஏற்பட்டது. சிமெண்ட் கலவை ஊற்றும் பணியின் போது பாரம் தாங்காமல் இரும்பு சாரம் விழுந்ததில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் கீழே விழுந்ததில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். தொடர்ச்சியாக பெய்த மழையினால் அப்பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக காணப்பட்டு வரும் நிலையில் இரும்பு சாரம் அமைக்கப்பட்ட பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. பாலம் ஸ்டேஷன் ரோட்டில்  பாலம் அமைக்கும் பணியின் போது நள்ளிரவில் சாரம் சரிந்து விழுந்ததில் ஜெபராஜ், அய்யங்காளை, பழனிசாமி, பூவழகன் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். 4 பேரும் மீட்க்கப் பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
 
பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
 
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்...,” மதுரையில் ஏற்கனவே நத்தம் பாலம் கட்டுமான பணியின் போது தொழிலாளி ஒருவர் இறந்தார். பொறியாளர்களுக்கு கீழ்நிலையில் கண்காணிக்க கூடிய நபர்களை பணி அமர்த்தி, வேலை நடக்கும் போது பார்வையிட வைக்க வேண்டும். அப்போது தான் தவறுகள் ஏதும் நடக்காமல், விபத்து போன்றவை தவிர்க்கப்படும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Russia Vs Europe: “நாங்க இப்போவே ரெடி, போருக்கு வர்றீங்களா.? ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புதின் - என்ன நடந்தது.?
“நாங்க இப்போவே ரெடி, போருக்கு வர்றீங்களா.? ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புதின் - என்ன நடந்தது.?
Trump Vs Joe Biden: “செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
“செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush
AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Russia Vs Europe: “நாங்க இப்போவே ரெடி, போருக்கு வர்றீங்களா.? ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புதின் - என்ன நடந்தது.?
“நாங்க இப்போவே ரெடி, போருக்கு வர்றீங்களா.? ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புதின் - என்ன நடந்தது.?
Trump Vs Joe Biden: “செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
“செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
அடி தூள்.. தூயமல்லி அரிசி, கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு- அசத்தும் வேளாண்மை துறை
அடி தூள்.. தூயமல்லி அரிசி, கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு- அசத்தும் வேளாண்மை துறை
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Embed widget