மேலும் அறிய

Kundrakudi Temple Elephant: தீ விபத்தில் சிக்கிய குன்றக்குடி கோயில் யானை உயிரிழப்பு - சோகத்தில் பக்தர்கள்

நேற்று நள்ளிரவு நடந்த தீ விபத்தில் காயம் அடைந்த குன்றக்குடி கோயில் யானை இன்று அதிகாலை உயிரிழப்பு. சோகத்தில் உறைந்த சிவகங்கை மாவட்ட மக்கள்.

இறந்த கோயில் யானைக்கு முருக பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குன்றக்குடி அடிகள் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பலரும் யானைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்

குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது’ என்பது தமிழகத்தில் பரவிக்கிடக்கும் பழமொழிகளில் ஒன்று. இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்தவை கை கூடியே தீரூம் என்பது எதிர்மறையாக வலியுறுத்தப்படுகிறது. அந்த அளவிற்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றும் வல்லமை கொண்ட கோயிலாக குன்றக்குடி முருகன் கோயில் பார்க்கப்படுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில்  பிராத்தனைத் தலங்கலில் மேன்மை வாய்ந்தது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றை குன்றக்குடி குமரனிடம் பக்தர்கள் வேண்டுகின்றனர். இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு.

Kilambakkam Railway Station: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும், என்னென்ன வசதிகள் உள்ளன? - இதோ முழு விவரம்

குன்றக்குடி மயில் மலை

குன்றக்குடி மலையானது முருகனின் ஊர்தியான மயில், அப்பெருமான் சாபத்தால் மயிலுருவத்தில் மலையாக இருந்து சாபவிமோசனம் பெற்றதால் மயில்மலை என்று பெயர் வந்துள்ளது, என்பதும் குறிப்பிடதக்கது. குன்றக்குடி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோயில் ஸ்தலமாகும். இதனால் பிள்ளையார்பட்டிக்கு வரும் பக்தர்கள் குன்றக்குடி முருகனையும் தரிசித்து செல்வார்கள். இந்நிலையில் முக்கியமான பார்க்கப்படும் குன்றக்குடி கோயிலின், யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யானை இறப்பு அப்பகுதி மக்களிடம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

குன்றக்குடியில் சண்முகநாதர் திருக்கோயிலுக்கு கடந்த 1971- ஆம் ஆண்டு ஆத்தங்குடியைச் சேர்ந்த  நகரத்தார் சுப்புலட்சுமி என்ற பெண் யானையை பரிசாக கொடுத்தார். குன்றக்குடி கோயில் நிர்வாகத்தின் சார்பில்  பராமரிப்பில் யானை வளர்ந்து வந்தது. தற்போது சுப்புலெட்சுமி  யானைக்கு 53 வயதாகிறது. இந்நிலையில் நேற்று கோயிலின் அடிவாரத்தில் கட்டிக் கிடந்த யானை அப்பகுதியில் நேர்ந்த தீ விபத்தால் படுகாயம் அடைந்தது. தீ பரவியவுடன் யானை தலை தெரிக்க ஓடியுள்ளது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கோயில் நிர்வாகத்திற்கும், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து யானையை மீட்டு கோயில் மடத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் யானை சுப்புலட்சுமி இன்று அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்தது. இதனை அறிந்த முருக பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தியுள்ளது.

குன்றக்குடி கோயில் யானைக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

இறந்த கோயில் யானைக்கு முருக பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குன்றக்குடி அடிகள் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பலரும் யானைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
 
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ரயிலடி டூ கரந்தை வரை.. தஞ்சையில் 61 விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget