மேலும் அறிய

பட்டா நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து அரசின் அனுமதியின்றி வெட்ட இயலுமா? - நீதிபதிகள் கேள்வி

’’விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்காகவும் பனை மரங்கள் வெட்டபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் பனைமரங்களை நட்டு பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் வழக்கு’’

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த டோமினிக் ரவி, உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழக அரசின் மரமாக பனைமரம் உள்ளது. பனைமரம் கடலோர மாவட்டங்களில் மண் அரிப்பைத் தடுக்கிறது. வறட்சியைத் தாங்கக் கூடியதாக உள்ளது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் வணிக நோக்கிலும், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பிளாட்டுகள் போட்டு விற்பதற்காகவும் பனை மரங்கள் வெட்டப்படுகின்றன. எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் வணிக நோக்கிலும், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்காகவும் பனை மரங்கள் வெட்டபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் பனைமரங்களை நட்டு பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா,  வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில்,"பட்டா நிலங்களில் சில பனைமரங்கள் வெட்டப்பட்டு உள்ளன" என தெரிவிக்கப்பட்டது.
 
அப்போது நீதிபதிகள், "பட்டா நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து  அரசின் அனுமதியின்றி வெட்ட இயலுமா? என கேள்வி எழுப்பினர். மேலும் வைகை ஆற்றிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சில கண்மாய்களுக்கு தண்ணீர் சரிவர சென்று அடைய வில்லை என வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமான அளவு தமிழகத்தில் மழை பொழிவு இருந்துவருகிறது. ஆனால் அதனை சேமிப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேள்வி   எழுப்பினர். தொடர்ந்து விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படும் பொழுது விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து வேளாண்துறை மற்றும் வனத்துறை செயலர்கள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கு - நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜர் - அடுத்தகட்ட  விசாரணை 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
 
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான கோகுல்ராஜ் மற்றும் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஸ்வாதியை காதலித்துவந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜீன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கானது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வன்கொடுமை தடுப்பு  சிறப்பு தனி நீதிமன்றத்தில் இன்று நீதிபதி சம்பத்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும்10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். கடந்த 6ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த வழக்கானது இறுதி்கட்ட விசாரணையை எட்டியுள்ள நிலையில்  வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட நிலையில் மாவட்ட நீதிமன்றத்தில்  காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
Embed widget