மேலும் அறிய

பட்டா நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து அரசின் அனுமதியின்றி வெட்ட இயலுமா? - நீதிபதிகள் கேள்வி

’’விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்காகவும் பனை மரங்கள் வெட்டபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் பனைமரங்களை நட்டு பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் வழக்கு’’

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த டோமினிக் ரவி, உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழக அரசின் மரமாக பனைமரம் உள்ளது. பனைமரம் கடலோர மாவட்டங்களில் மண் அரிப்பைத் தடுக்கிறது. வறட்சியைத் தாங்கக் கூடியதாக உள்ளது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் வணிக நோக்கிலும், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பிளாட்டுகள் போட்டு விற்பதற்காகவும் பனை மரங்கள் வெட்டப்படுகின்றன. எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் வணிக நோக்கிலும், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்காகவும் பனை மரங்கள் வெட்டபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் பனைமரங்களை நட்டு பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா,  வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில்,"பட்டா நிலங்களில் சில பனைமரங்கள் வெட்டப்பட்டு உள்ளன" என தெரிவிக்கப்பட்டது.
 
அப்போது நீதிபதிகள், "பட்டா நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து  அரசின் அனுமதியின்றி வெட்ட இயலுமா? என கேள்வி எழுப்பினர். மேலும் வைகை ஆற்றிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சில கண்மாய்களுக்கு தண்ணீர் சரிவர சென்று அடைய வில்லை என வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமான அளவு தமிழகத்தில் மழை பொழிவு இருந்துவருகிறது. ஆனால் அதனை சேமிப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேள்வி   எழுப்பினர். தொடர்ந்து விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படும் பொழுது விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து வேளாண்துறை மற்றும் வனத்துறை செயலர்கள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கு - நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜர் - அடுத்தகட்ட  விசாரணை 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
 
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான கோகுல்ராஜ் மற்றும் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஸ்வாதியை காதலித்துவந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜீன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கானது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வன்கொடுமை தடுப்பு  சிறப்பு தனி நீதிமன்றத்தில் இன்று நீதிபதி சம்பத்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும்10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். கடந்த 6ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த வழக்கானது இறுதி்கட்ட விசாரணையை எட்டியுள்ள நிலையில்  வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட நிலையில் மாவட்ட நீதிமன்றத்தில்  காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget