மேலும் அறிய

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

உயிரிழந்த இளைஞரின் தரப்பில் எந்தவித புகார் வரவில்லை என்பதால் இதுவரையும் விசாரணை தொடங்கப்படவில்லை என தெரிவித்தனர்.

மதுரையில் செட்டிநாடு சிக்கன் கிரேவியை சுட வைத்து சாப்பிட்ட பட்டதாரி இளைஞர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழப்பு - காவல்துறை விசாரணை.

எமனாய் வந்த செட்டிநாடு கிரேவி

மதுரை மாநகர் கோசாகுளம், மேலப்பனங்காடி ராஜ ராஜேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த ஆனந்த்ராஜ் (27).  அவரது மனைவி சௌமியா மற்றும் தனது 7-வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். ஆனந்த்ராஜ் வீட்டிலேயே டிரேடிங் மார்க்கெட்டிங் பணி செய்துவருகிறார். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி இரவு மேலப்பனங்காடி பகுதியில் உள்ள உணவகத்தில் ஆனந்தராஜின் தந்தை செட்டிநாடு சிக்கன் கிரேவி வாங்கி வந்துள்ளார்.
 
இதனை இரவு ஆனந்தராஜ் மற்றும் அவரது குழந்தையும் சாப்பிட்டுவிட்டு மறுநாள் காலையில் மீதம் இருந்த அதே சிக்கன் கிரேவியை சூடு செய்து ஆனந்த்ராஜ் சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் ஆனந்த்ராஜ்க்கு வாந்தி வந்துள்ளது. இதையடுத்து பீ.பீ.குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.
 

சிக்கன் சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சோகம்

அதன்பிறகும் தொடர்ந்து வயிற்று போக்கு இருந்ததாகவும்  மருந்து மாத்திரை வாங்கிவிட்டு, பின்னர் 28-ம் தேதியும் மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுக் கொண்டுள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது மாலை, ’மயக்கம் வருவது போல உள்ளதால் மருத்துவமனை செல்ல வேண்டும்” என கூறி சேரில் அமர்ந்துள்ளார். இதையடுத்து வாகனம் மூலமாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
 
அப்போது, ஆனந்த்ராஜின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக ஆனந்தராஜின் உடல் வைக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் உடலை பெற்றுக் கொண்டனர். கடந்த 26-ம் தேதி கடையில் இருந்து இரவில் சிக்கன் வாங்கிச் சென்று மீதியிருந்த  சிக்கனை அடுத்த நாள் காலையில் சிக்கனை சுடவைத்து சாப்பிட்ட நிலையில், இளைஞர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென உயிரிழந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
 

நடவடிக்கை இல்லை

இதனிடையே சிக்கன் சாப்பிட்ட சிறுவனக்கும் தொடர்ந்து தொண்டை வலி இருந்துவருகிறது. உணவகத்தில் இரவு வாங்கிய செட்டிநாடு சிக்கனை அடுத்தநாள் காலையில் சாப்பிட்ட சிறிதுநேரத்தில் சிக்கன் சாப்பிட இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து, சந்தேக மரணம் என்ற அடிப்படையில் கூடல்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது. “உயிரிழந்த இளைஞரின் தரப்பில் எந்தவித புகார் வரவில்லை என்பதால் இதுவரையும் விசாரணை தொடங்கப்படவில்லை” - என தெரிவித்தார்.
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget