மேலும் அறிய

Madurai: வைகையைப் போல் இளையராஜாவையும், பாரதி ராஜாவையும் மறக்க முடியாது ’ - இயக்குநர் மிஷ்கின்!

’மதுரையில் இரவு 1 மணிக்கு ஐஸ்கிரீம் தேடி அலைந்தோம். ஆனால், சூடாக பருத்திப்பால் கிடைத்தது. வாழ்நாளில் அந்த நேரத்தில், அப்படி ஒரு பானத்தை நான் குடித்ததே இல்லை” - நெகிழ்ந்த இயக்குநர் மிஷ்கின்.

மதுரையின் வரலாறுகளைப் பற்றி எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய "தூங்காநகர நினைவுகள்" நூல் அறிமுக விழா மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், மிஷ்கின், பேராசிரியர் சுந்தர் காளி, எழுத்தாளர் ஷாஜகான், பேராசிரியர் பிரபாகர், ஊடகவியலாளர் விஜயானந்த் ஆகியோர் பங்கேற்று நூலை அறிமுகம் செய்தனர். இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகையில்,"இரவு முழுவதும் உணவு தரும் ஒரே நகரம் மதுரை தான். விடிய விடிய கதையை, கலையை ரசிக்கும் ரசிகர்கள் வாழும் ஒரே நகரம் மதுரை. தமிழ் சினிமாவின் தலையெழுத்தை தீர்மானித்த நகரம் மதுரை.  திண்ணை இல்லாத வீடே மதுரையில் கிடையாது. வந்தவர்கள் அனைவருக்கும் சோறு போட்ட ஊர் மதுரை. உலகத்திலேயே, சுவடிகளை எழுதவதற்கு பயன்படும் எழுத்தாணிகளை செய்து கொடுத்த கலைஞர்கள் இருந்ததும், அவர்களின் நினைவாக எழுத்தாணிக்கார தெரு என்ற தெருவை கொண்டுள்ள ஒரே ஊரும் மதுரை தான்.

Madurai: வைகையைப் போல் இளையராஜாவையும், பாரதி ராஜாவையும் மறக்க முடியாது ’ - இயக்குநர் மிஷ்கின்!
 
காலனி ஆதிக்கம் மதுரையின் தொன்மையையும் உடைக்கும். ஆனால், நினைவுகளின் வழியாகவும், ஆவணப்படுத்துதல் வழியாகவும் தான் மதுரையை காப்பாற்ற முடியும். மதுரையை ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், மாங்குடி மருதனார் உள்ளிட்ட எவ்வளவோ பேர் பாடியது போல முத்துக்கிருஷ்ணனும் பாடியதன் சாட்சியே தூங்காநகர நினைவுகள் நூல்" என தெரிவித்தார்.

Madurai: வைகையைப் போல் இளையராஜாவையும், பாரதி ராஜாவையும் மறக்க முடியாது ’ - இயக்குநர் மிஷ்கின்!
இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், "சித்திரம்பேசுதடி படம் வெளியான பின்னர் மதுரையின் சாலை ஒன்றில் நின்று கொண்டிருக்கையில், என்னைப் பார்த்து ஒருவர் ஒழுங்கா படம் எடு என எச்சரித்து விட்டுப் போனார். 
என்னுடைய முதல் ரசிகர் மதுரைக்காரர் தான். நான் பிறந்த ஊர் திருப்பத்தூராக இருந்தாலும், வளர்ந்த ஊர் திண்டுக்கல்லாக இருந்தாலும், மதுரையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. மதுரையில் இரவு 1 மணிக்கு ஐஸ்கிரீம் தேடி அலைந்தோம். ஆனால், சூடாக பருத்திப்பால் கிடைத்தது. வாழ்நாளில் அந்த நேரத்தில், அப்படி ஒரு பானத்தை நான் குடித்ததே இல்லை. மதுரையில் இருந்து திரையுலகிற்கு வந்த பாரதிராஜா, இளையராஜா, பாலா, வடிவேலு ஆகிய 4 பேரை எனக்கு மிகவும் பிடிக்கும். இளையராஜா என்ன வேண்டுமானாலும் பேசி விட்டுப் போகட்டும். ஆனால், அவருக்கான கை தட்டல்களை நாம் மறுக்க கூடாது. மதுரையையும், வைகையையும் மறக்க முடியாதது போல், இளையராஜாவையும் பாரதிராஜாவையும் மறக்கவே முடியாது.
தமிழ் சினிமாவில் தன்னுடைய உடல்மொழியால் வடிவேலு முன்வைத்த ஒரு அடியை கூட வேறு யாருமே செய்ததில்லை.

Madurai: வைகையைப் போல் இளையராஜாவையும், பாரதி ராஜாவையும் மறக்க முடியாது ’ - இயக்குநர் மிஷ்கின்!
 
தூங்காநகர நினைவுகள் நூல் அறிமுக விழாவுக்கு முன்னதாக மதுரையில் கீழடி அகழாய்வு நடைபெறும் இடத்தையும், சமணர் மலையையும் பார்த்தேன். மனம் இது போதும் என்றளவுக்கு நிறைவாக இருந்தது. மதுரையை பற்றிய ஒரு எளிமையான அறிமுகத்தை இந்த நூல் வழங்குகிறது. இந்த நூலில், தாது வருட பஞ்சத்தின் போது மதுரை மக்களின் பசியைப் போக்கிய குஞ்சரத்தம்மாள் பற்றிய பகுதி போதும். இது ஒரு சிறந்த நூல் என சொல்வதற்கு. தன்னுடைய சொத்தை எல்லாம் செலவழித்து கஞ்சி ஆக்கிய போது எழுந்த புகை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை தாண்டி உயர்ந்து நின்றது என்ற வரிகளுக்காகவே முத்துக்கிருஷ்ணனை கொண்டாடலாம்.
உலகத்தில் எங்கெல்லாம் ஒரு பெண் நல்லது செய்கிறாளோ அவர்கள் எல்லோருமே குஞ்சரத்தம்மாள் தான்.
குஞ்சரத்தம்மாள் கதையை படமாக எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்தக் கதை ஆஸ்கார் வாங்கும் என நம்புகிறேன்" என குறிப்பிட்டார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Embed widget