மேலும் அறிய

Madurai: பா.ஜ.க., மாவட்ட செயலாளர் கொலை: கைதான 5 பேரில் 3 பேருக்கு கால் உடைந்து மாவுக்கட்டு!

சக்திவேலிடம் பணிபுரியும் பணியாளர்களாலேயே சக்திவேலை பணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் பாஜக மாவட்ட செயலாளர் சக்திவேல்  கொலை வழக்கில் 5 பேர் கைது - இதில் 3 பேர் தப்பியோட முயன்றபோது கல்குவாரி பள்ளத்தில் விழுந்ததில் கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதி.
 
ராமநாதபுரம் கமுதியை அடுத்த கீழ வல்லானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (35) இவர் மதுரை மாநகர் கருப்பாயூரணி  குறிஞ்சி ரெசிடென்சி பகுதியில் வசித்துவருகிறார். இவர் மதுரை மாவட்ட பாஜக ஓ.பி.சி., அணியின் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும் இவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை  சக்திவேல் தனது வீட்டில் இருந்து யாகப்பா நகரில் உள்ள தனது அரிசி அரவை மில்லுக்கு சென்றபோது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து சக்திவேலின் மனைவி முத்துவேல் அளித்த புகாரின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

Madurai: பா.ஜ.க., மாவட்ட செயலாளர் கொலை: கைதான 5 பேரில் 3 பேருக்கு கால் உடைந்து மாவுக்கட்டு!
 
இந்நிலையில் சக்திவேலை கொலை செய்துவிட்டு தப்பியோடி கடச்சனேந்தல் - ஒத்தக்கடை சந்திப்பு சாலையோரத்தில் பதுங்கியிருந்த மதுரை கல்மேடு எல்.கே.பி., நகரை சேர்ந்த மருதுபாண்டி (27) மற்றும் அவரது தம்பி ரஞ்சித்குமார்(24) மற்றும் அவர்களது நண்பர்களான அண்ணாநகரை சேர்ந்த தென்னரசு(21), கடச்சனேந்தலை சேர்ந்த ஆகாஷ்(27), கே.புதூரை சேர்ந்த அகிலன் ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது 5 பேரிடம் கவால்துறையினர் நடத்திய விசாரணையில்  கொலையான சக்திவேலின் மில்லில் வேலை பார்த்த மருதுபாண்டி என்பவர் வாங்கியிருந்த பணத்தை திருப்பி செலுத்தாமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். அதனால் சக்திவேல் மருதுபாண்டியிடம் தொடர்ந்து பணம் கேட்டுள்ளார்.  இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. மேலும் கொலையுண்ட சக்திவேல், மருதுபாண்டியிடம் பணத்தை திருப்பி தரவில்லையென்றால் அவரது மனைவி முன் அடித்து அசிங்கப்படுத்திவிடுவேன் என கூறியுள்ளார். இந்த முன்விரோதத்தால் சக்திவேலை  கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Madurai: பா.ஜ.க., மாவட்ட செயலாளர் கொலை: கைதான 5 பேரில் 3 பேருக்கு கால் உடைந்து மாவுக்கட்டு!
 
இதனைத்தொடர்ந்து சக்திவேல் கொலை வழக்கில் 5 பேர்களை கைது செய்து, அவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக ஆயுதங்களை பதுக்க வைத்திருந்த பாண்டியன் கோட்டை பிருந்தா நகர் கல்குவாரி பள்ளத்திற்கு  காவல்துறையினர் அழைத்துசென்றனர்.  அப்போது ஆயுதங்களை கைப்பற்றும் போது  அங்கிருந்த காவல்துறையினரிடம் இருந்து மருதுபாண்டி, ரஞ்சித்குமார், தென்னரசு ஆகிய 3 பேரும் கல்குவாரி பள்ளத்தில் குதித்து தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது 3பேருக்கும் கால் எலும்பில் காயம் ஏற்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அகிலன் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 5 பேரையும் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரையில் பாஜக மாநகர் ஓ.பி.சி., அணி மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 3 பேருக்கு கால்முறிவு ஏற்பட்டதோடு சக்திவேலிடம் பணிபுரியும் பணியாளர்களாலயே சக்திவேலை பணத்திற்காக கொலை செய்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
 
 
 

தலைப்பு செய்திகள்

கேரளாவை மிஞ்சும் தமிழக நீர் சுற்றுலா: வைகை அணையில் படகு சவாரிக்கு கோரிக்கை!
கேரளாவை மிஞ்சும் தமிழக நீர் சுற்றுலா: வைகை அணையில் படகு சவாரிக்கு கோரிக்கை!
விருதுநகரில் ஆசிரியர் தகுதித்தேர்வு: ஜூலை 4, 5ஆம் தேதி நடைபெறும் தேர்வுக்கு முழு ஏற்பாடு !
விருதுநகரில் ஆசிரியர் தகுதித்தேர்வு: ஜூலை 4, 5ஆம் தேதி நடைபெறும் தேர்வுக்கு முழு ஏற்பாடு !
மதுரையில் இந்த வார சனிக்கிழமை (04.07.2026) அன்று மின்தடை லிஸ்ட்... இப்பவே கைக்கு வந்தாச்சு !
மதுரையில் இந்த வார சனிக்கிழமை (04.07.2026) அன்று மின்தடை லிஸ்ட்... இப்பவே கைக்கு வந்தாச்சு !
விருதுநகர் கவிதா நகர் டாஸ்மாக்: விதிகள் மீறப்பட்டதா? உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
விருதுநகர் கவிதா நகர் டாஸ்மாக்: விதிகள் மீறப்பட்டதா? உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
Senthil Balaji: திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
TVK Government : ’துணை முதலமைச்சர் கனவில் இருந்த செந்தில்பாலாஜி’ மண் அள்ளிக் கொட்டிய தவெக..!
’துணை முதலமைச்சராகும் முயற்சி’ திட்டம் தீட்டிய செந்தில்பாலாஜி..!
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?
பார்த்திபனை திட்டியது சுந்தர்ராஜனா? பாண்டியராஜனா? அவரே தந்த விளக்கம்
பார்த்திபனை திட்டியது சுந்தர்ராஜனா? பாண்டியராஜனா? அவரே தந்த விளக்கம்
Anitha Radhakrishnan : ’திமுக அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி’ விரைவில் கைது ?
Anitha Radhakrishnan : ’திமுக அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி’ விரைவில் கைது ?
Honda 7 Seater: டாடா., மஹிந்த்ராவின் 7 சீட்டர்களுக்கு போட்டியாக ஹோண்டா..! ஹைப்ரிட்டில் கலக்குமா? விலை?
டாடா., மஹிந்த்ராவின் 7 சீட்டர்களுக்கு போட்டியாக ஹோண்டா..! ஹைப்ரிட்டில் கலக்குமா? விலை?
திரைக்குப் பின்னால் ஒரு பேரரசு: எறும்புப் புற்றின் வியப்பூட்டும் சமூகக் கட்டமைப்பும், வேலைப் பகிர்வும்!
திரைக்குப் பின்னால் ஒரு பேரரசு: எறும்புப் புற்றின் வியப்பூட்டும் சமூகக் கட்டமைப்பும், வேலைப் பகிர்வும்!
Embed widget