மேலும் அறிய
Madurai ; பொதிகை ரயிலில் ராணுவ வீரரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் !
குற்றம்சாட்டப்படும் டிக்கெட் பரிசோதகர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்த நிலையில் டிக்கெட் பரிசோதனை சஸ்பெண்ட் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தாக்கிய சம்பவம்
Source : whatsapp
பொதிகை ரயிலில் பயணியை தாக்கியதாக டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்.
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த முருகன் என்பவர் ராணுவத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவர் நேற்று தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணம் செய்துள்ளார். பயணத்தின் போது டிக்கெட் பரிசோதகர் (டிடிஆர்) முருகனிடம் டிக்கெட் கேட்டதாகவும், அவரிடம் டிக்கெட் இல்லாததால் அபராதத் தொகையை செலுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ரயில் மதுரை ரயில் நிலையத்தை இரவு சுமார் 10 மணியளவில் வந்தடைந்தபோது, முருகனை ரயிலில் இருந்து இறக்கிவிட்ட டிக்கெட் பரிசோதகர், அவரை ஆபாசமாக பேசியதுடன் காலால் எட்டி உதைத்து தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. தொடர்ந்து பயணியை ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும்படி தொடர்ச்சியாக தாக்கியுள்ளார்.
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்திருந்தால் விதிமுறைகளின்படி அபராதம் வசூலிக்கலாம்
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்திருந்தால் விதிமுறைகளின்படி அபராதம் வசூலிக்கலாம்; ஆனால் பயணியிடம் வன்முறையில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, பயணியை தாக்கியதாக குற்றம்சாட்டப்படும் டிக்கெட் பரிசோதகர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்த நிலையில் டிக்கெட் பரிசோதனை சஸ்பெண்ட் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Before You Go
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















