மேலும் அறிய
Madurai Power Shutdown (30.07.2026) : மதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை : உங்கள் ஊரில் கரண்ட் இருக்கா? தெரிந்து கொள்ளுங்கள்!
மதுரை மின் தடை: (30.07.2026) நாளை பராமரிப்பு பணிகளால் எந்தெந்த பகுதிகள்? - முழு விவரம்.

மின்தடை
Source : whatsapp
மதுரையில் குறிப்பிட்ட இடங்களில் நாளை (30.07.2026 காலை 09.00மணி முதல் மாலை 05.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் அன்றையதினம் கீழ்கண்டபகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது.
மின்தடை
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை மின் தடை ஏற்படவுள்ளது. நாளை 30.07.2026 (வியாழக்கிழமை) கொட்டாம்பட்டி துணைமின் நிலையம் சிறப்பு பராமரிப்பு வேலை நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 09:00 மணிமுதல் மதியம் 05:00 மணி வரை கீழ்கண்ட ஊர்களில் மின் விநியோகம் தடைபடும்
மின்விநியோகம் தடைபடும் ஊர்களின் பெயர்கள்:
கொட்டாம்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, வெள்ளினிப்பட்டி, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, V.புதுார், சொக்கலிங்கபுரம், மணலமேட்டுப்பட்டி பள்ளப்பட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி, பாண்டாங்குடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.
Before You Go
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















