மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
இல்லம் தேடி கல்வி என்பது மாறி, இல்லம் தேடி சாராயம் என்ற நிலை - எவிடன்ஸ் கதிர்
அ.தி.மு.க ஆட்சியில் காட்டில் விற்பனை நடந்தது , திமுக ஆட்சியில் வீட்டிற்கே தேடிவந்து கள்ளச்சாரயம் விற்பனை நடைபெறுவதாக, அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். - எவிடன்ஸ் கதிர் பேட்டி
![இல்லம் தேடி கல்வி என்பது மாறி, இல்லம் தேடி சாராயம் என்ற நிலை - எவிடன்ஸ் கதிர் Education in search of home in Tamil Nadu has come to the stage of changing home and drinking Evidence Kathir இல்லம் தேடி கல்வி என்பது மாறி, இல்லம் தேடி சாராயம் என்ற நிலை - எவிடன்ஸ் கதிர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/27/88184709cd7b2a34c03523bbd1bee1eb1719478777102184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
எவிடென்ஸ் கதிர்
எவிடன்ஸ் கதிர் பேட்டி
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக நேரடி கள ஆய்வு மேற்கொண்ட எவிடன்ஸ் அமைப்பின் இயக்குநர் கதிர் நரிமேடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் கள ஆய்வு அறிக்கை வெளியிட்டு செய்தியாளர்களிடம்,” கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணம் 64பேர் உயிரிழந்துள்ளனர் இறப்பு விகிதம் உயரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் இதுவரை 211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மரக்காணத்தில் 22 பேர் உயிரிழந்த போது நேரடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று இனி ஒரு சொட்டு கள்ளச்சாராய விற்பனை நடக்காது என கூறினார்.
ஆனால் இப்போது கள்ளச்சாராய விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதர்சேரி ஆகிய பகுதிகளில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டோம். கருணாபுரத்தில் காவல்நிலையம், கோர்ட், கலெக்டர் ஆபிஸ் அருகே விஷ சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் அரசு நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளது. இந்த விஷ சாராய மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும், எனவும், மருத்துவமனையில் RED ZONE மற்றும் DARK ZONE வார்டுகளில் அதிக பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விஷ சாராய விவகாரத்தில் உயிரிழப்புகள் அதிகரிப்பை தாமதமாக அறிவிக்க மக்களை திசை திருப்புகின்றனர், தமிழகத்தில் 45ஆயிரத்தில் 862 கோடிக்கு டாஸ்மாக் வியாபாரம் நடைபெற்றுள்ளது. 54 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கோண்டோம் - இதில் பட்டியலினத்தவர்கள் தான் அதிகம் இறந்துள்ளனர். இறந்தவர்களின் பெண்களும் குறைந்த வயதுடையவர்களாக உள்ளனர். உயிரிழந்துவிடுவார்கள் என்ற நிலைமையில் உள்ள DARK RED ZONE ல் - அதிகளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாரயத்தில் காவல்துறை லஞ்சம்
விஷ சாராயத்தில் உயிரிழந்தவர்களில் 28 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்துவருகின்றனர். இதில் 11. பெண் குழந்தைகள் உள்ளனர். கள்ளக்குறிச்சியில் மொத்த வியாபாரியிடம் இருந்து சில்லறை வியாபாரிகளுக்கு கள்ள சாராயம் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. ஒரு பாக்கெட் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் மாலை 4 முதல் 7 மணி வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாள்தோறும் காவல்துறையினர் தூரமாக நின்று லஞ்சம் வாங்கி சென்றுவந்துள்ளனர். 18-ம் தேதியே கள்ளசாராயம் அருந்தி இருவர் இறந்துள்ளனர்.
ஆனால் அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் கள்ளச்சாராய மரணம் இல்லை என்றார். தலித் மக்கள் அதிகமாக இருக்ககூடிய பகுதிகளை குறிவைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களும் கள்ளச்சாராயம் குடித்துவருகின்றனர். 18-ம் தேதியே விஷ சாராயம் அருந்திய இளைஞர் ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது சிகிச்சை அளிக்க முடியாது என கூறி அனுப்பியுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் காட்டில் - திமுக ஆட்சியில் வீட்டில்
கள்ளக்குறிச்சியில் மாதவசேரியில் கோவிலில் வைத்து பூசாரி கள்ளச்சாராயத்தை விற்றுள்ளனர். இல்லம் தேடி கல்வி என்பதை மறந்து இல்லம் தேடி சாராயம் என்பது போல் மாறிவிட்டது. தமிழ்நாடு உளவுத்துறைக்கு கள்ள சாராய விற்பனை குறித்து தெரியாதா? கள்ளச்சாராயம் விற்பனை குறித்து புகார் அளித்தால் புகார்தாரரை வீடு்தேடிவந்து புகார் மனுவை காண்பித்து மிரட்டிச் செல்லும் வகையில் முதலமைச்சரின் கீழுள்ள காவல்துறை செயல்பட்டுவருகின்றது.
தமிழக அரசு கள்ள சாராய மரணத்தில் தோற்றுபோய்விட்டது. அரசின் இயலாமை, மரணத்திற்கு பொறுப்பு என்பதற்காக்தான் 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுதொகை அளித்துள்ளனர். கள்ளச்சாராய மரண விவகாரத்தில் SC ST வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட முடியாது என SC ST மாநில ஆணையம் தெரிவிக்கின்றது.
ஏற்கனவே குண்டாசில் இருந்த கோவிந்தராஜ் என்ற நபர் மூலமாக தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுவந்துள்ளது. தற்போது பல ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் கண்டறியப்படுகிறது. முதலமைச்சர் ஒரு சொட்டு விற்பனை ஆகாது என கூறிய நிலையில் எப்படி விற்பனை நடந்தது, எவிடென்ஸ் அமைப்பு கள ஆய்வுக்கு சென்றபோது மருத்துவமனைக்குள் ICU வார்டுக்குள் அனுமதிக்கவில்லை , மரண விவரத்தை முழுமையாக தெரிந்துவிடும் என்பதால் அனுமதிக்கவில்லை, ஊடகத்தினரையும் மருத்துவமனைக்குள் அனுமதிப்பதில்லை, எங்கள் குழுவை காவல்துறையினர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் காட்டில் விற்பனை நடந்தது, திமுக ஆட்சியில் வீட்டிற்கே தேடிவந்து கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்”. என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
திரை விமர்சனம்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion