மேலும் அறிய

நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக பீகார் மாநிலத்தில் இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 6 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிந்தது தேசிய அளவில் பரபரப்பை கிளப்பிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

தொடர் பரபரப்பை கிளப்பும் நீட் விவகாரம்: நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பீகாரில் இருவரை கைது செய்துள்ளனர். மணீஷ் குமார் மற்றும் அசுதோஷ் என அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பணம் அளித்த மாணவர்களை மணீஷ் குமார் என்பவர்தான் காரில் ஏற்றி கொண்டு யாரும் இல்லாத பள்ளிக்கு அழைத்து சென்றதாக சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

தேர்வு தேதிக்கு முன்னதாகவே அவர்களுக்கு வினாத்தாள் அளிக்கப்பட்டு அதில் உள்ள வினாக்களை மனப்பாடம் செய்ய வைத்ததாகவும் கூறப்படுகிறது. பணம் அளித்த மாணவர்களை அசுதோஷ் தனது வீட்டிலேயே தங்க வைத்ததாகவும் சிபிஐ அதிகாரிகள் கூறுகின்றனர்.

குற்றம்சாட்டப்பட்ட மணீஷ் குமார் மற்றும் அசுதோஷை விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் இன்று அழைத்துள்ளனர். விசாரணையை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ சார்பில் இதுவரை 6 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு மத்தியில், நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைமை அலுவலகத்திற்குள் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் நுழைந்துள்ளனர். 

அதிரடி காட்டும் சிபிஐ: கடந்த சனிக்கிழமை, மத்திய கல்வித்துறை அமைச்சகத்தால் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் FIR பதிவு செய்யப்பட்டது. சிபிஐக்கு முன்னதாக இந்த விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் சிலரை கைது செய்திருந்தனர்.

பீகார், மகாராஷ்டிரா, டெல்லியில் அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேர்வு தேதிக்கு முன்னதாக வினாத்தாள் நகலை பணம் கொடுத்து வாங்கிய மாணவர் உள்பட பலர் கைதாகினர். கடந்த 2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான 4ஆம் தேதி இரவே தேர்வு முடிவுகளும் வெளியாகின. 

இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றனர். சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.

முதலில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததை தேசியத் தேர்வுகள் முகமை முதலில் மறுத்தது. ஆனால், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்டார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Embed widget