மேலும் அறிய

Sellur Raju: "மோடி போல் எடப்பாடியாரும் பிரதமர் ஆவார்" - செல்லூர் ராஜூ சொல்லும் கணக்கு

மோடி பிரதமராவார் என யாராவது நினைத்தார்களா? அவர் முதலமைச்சராக ஆவார் என எதிர்பார்த்தார்களா?. அதுபோல எடப்பாடி பழனிசாமியும் உயர்வார்.

மதுரை துவரிமான் கீழத்தெருவில் உள்ள சமுதாய கூடத்தின் முதல் மாடியில் மேற்கூரை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டார்.  அப்போது செய்தியாளர்களிடம் செல்லூர் கே.ராஜூ பேசுகையில்,

 பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி கூட்டம் குறித்த கேள்விக்கு., 

இதுகுறித்து அதிகம் சொல்ல விரும்பவில்லை. இந்த கூட்டம் நடந்தது ஒரு பிரோஜனம் இல்லை. இந்த கூட்டத்தில் ஒரு முடிவும் எட்டப்படவில்லை.  இதில் தலைவர் கூட தேர்வு செய்யப்படவில்லை. உப்புக்கு சப்பான கூட்டமாக பார்க்கிறேன். ஒற்றுமை இல்லாத கூட்டணி. தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் பிரதமர் வேட்பாளர் என்கின்றனர். ஆனால் அவர் திருவாய் மலரவில்லை. காங்கிரஸ் குறித்தும் ஸ்டாலின் எதுவும் சொல்லவில்லை.

செந்தில் பாலாஜி  சிகிச்சை குறித்த சந்தேகத்தை தீர்ப்பது தொடர்பாக, அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தது குறித்த கேள்விக்கு.,

எய்ம்ஸ், அப்போலோ உள்ளிட்ட மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்ததாக சொல்லவில்லை. காவேரி மருத்துவமனையில் செய்ததாக சொல்கின்றனர். இதனால் அவர்கள் சொல்வதில் சந்தேகம் ஏற்படுகிறது. வாக்கிங் போனவருக்கு இப்படி நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டது. இதனால் சந்தேகம் வலுக்கிறது. எனவே இந்த சந்தேகத்தின் விளக்குவது அரசின் கடமை, முதலமைச்சரின் கடமை. ஆனால் சுகாதாரத்துறை அமைச்சரை விட்டு மறைமுகமாக இதுகுறித்து பேசுவது தலைமைக்கு அழகல்ல.


Sellur Raju:


 மதுரையில் ஏற்படும் தொடர் திருட்டு சம்பவம் குறித்த கேள்விக்கு., 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. கூட்டணி கட்சிகள் எந்த கேள்வியும் கேட்காமல் வாயை வாடகைக்குவிட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற ஊழல் பட்டவர்த்தனமாக வெளியே தெரிகிறது. ஆனால் கூட்டணிக்கட்சிகள் கண்டுகொள்வதில்லை. தி.மு.க.,விற்கும் கூட்டணி கட்சிகளுக்கும் மக்கள் நாடாளுமன்றத்தில் பதில் கொடுப்பார்கள்.

நாடாளுமன்ற கூட்டணி தலைமை குறித்த கேள்விக்கு., 

மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சி தலைமையில் தான் கூட்டணி என முதலமைச்சர் சொல்வது சரி தான். அதை தான் நாங்களும் சொல்கிறோம். தி.மு.க., கூட்டணியில் தொகுதி பிரிக்கும் போது, சீட் பிரிக்கும் போது பிரச்னை வரும். அதைப் போல் எங்கள் கூட்டணியில் அதிமுக தான் தலைமை தாங்கும். அண்ணாமலையும் தலைமை தான் முடிவு செய்யும் என சொல்லியுள்ளார். தலைமை குறித்து அண்ணாமலை முரணாக சொல்லவில்லை. ஆளுநர் பிரச்னையில் தி.மு.க., ஆட்சி கலைக்கப்படலாம். தி.மு.க., ஆட்சி பல முறை கலைக்கப்பட்டுள்ளது. 


Sellur Raju:


அமித்ஷா தமிழர் பிரதமர் ஆவது குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு.,

தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை மனதில் வைத்தே அமித்ஷா சொல்லியிருக்கலாம். தமிழர் பிரதமராக வருவதாக,  சொல்வது, கட்சியை வளர்க்க இப்படி சொல்லி இருக்கலாம். இதை அளவுகோலாக எடுக்க தேவையில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து அவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள். இன்று இருக்கும் கூட்டணி நாளை இருக்காது. எனவே கூட்டணியை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது.


Sellur Raju:

 விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு ! 

அடுத்த தலைமுறை விஜய் தான். அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு?. ஒரு தமிழராக விஜய் தன்னுடைய சொந்த பணத்தை 13 மணி நேரம் நின்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கொடுத்துள்ளார்.  யார் யாரோ  தங்களை பிரதமர் என்றும், முதலமைச்சர் என்றும் சொல்லிக்கொள்கின்றனர். அப்படி இருக்கும்போது விஜய் ஏன் வரக்கூடாது?. அவர் அரசியலுக்கு வருவதையும், வளர்வதையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம்.
அவர் எங்களுக்கு போட்டியாக வருவாரா என்று சொல்ல முடியாது. ஆனால் எங்களுக்கு போட்டி திமுக தான். 
அதிமுக vs திமுக என்பது தான் தமிழ்நாட்டு அரசியல். இதிலிருந்து மாறுவதற்கு வழியே இல்லை. 
எத்தனையோ கட்சிகள் வரும் போகும். திமுக vs பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிசாமி விட மாட்டார். இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான். எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது. மோடி பிரதமராவார் என யாராவது நினைத்தார்களா? அவர் முதலமைச்சராக ஆவார் என எதிர்பார்த்தார்களா?. அவர் ஒரு சாதாரண ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்தவர். அவருடைய உழைப்பால் உயர்ந்தார். அதுபோல எடப்பாடி பழனிச்சாமியும் உயர்வார்.

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


தலைப்பு செய்திகள்

மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget