மேலும் அறிய

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - எம்பி கனிமொழி குற்றச்சாட்டு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை. திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு

மதுரையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திமுக  துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையிலான 11 பேர் கொண்ட நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழு இன்று மதுரை பாண்டி கோவில் ரிங்ரோடு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்திப்பில்..,” இந்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தளின் படி நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு  சென்று அங்குள்ள பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த சங்கங்கள், அமைப்புகளை சந்தித்து  கோரிக்கை மனுக்களைப் பெற்று தேர்தல் அறிக்கையாக உருவாக்க வேண்டும் என்று அனுப்பி உள்ளார்.


மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - எம்பி கனிமொழி குற்றச்சாட்டு

அதன் அடிப்படையில் திராவிட முன்னேற்ற கழகம் மக்களை சந்தித்து மக்களுக்கான ஒரு தேர்தல் அறிக்கையாக, மக்களால்  போற்றப்படும் அறிக்கையாக எப்பொழுதும் இருக்கும்படி தயார்  செய்துள்ளோம். இந்தாண்டும் மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கை உருவாக்க  கருத்து கேட்ப்பு கூட்டம் நடத்துகிறோம். துத்துக்குடி, கன்னியாகுமரி முடித்துவிட்டு இன்று மதுரையில் மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம். இன்று மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகள் எங்களிடம் கோரிக்கைகளை அளித்திருக்கிறார்கள். கோரிக்கைகளைப் படித்து முக்கியமான கோரிக்கைகளை   முதலமைச்சரிடம் கொண்டு சென்று அவரின் ஒப்புதலை பெற்று தேர்தல் அறிக்கை வெளியிடுவோம்.


மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - எம்பி கனிமொழி குற்றச்சாட்டு

ஜிஎஸ்டியில் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்னைகள் வரிகள் குறிப்பாக சிறுகுரு தொழில் செய்யக்கூடியவர்கள் மிகப்பெரிய அளவில் ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள். ரயில்வேயை  பொருத்தவரை தென் மாவட்டங்களுக்கு வழக்கமாக நிதி குறைவாக தான் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறைக்கக்கூடிய சூழலை நாம் பார்க்கிறோம். இன்று 100 நாள் வேலையில் பல குழப்பங்கள் உள்ளன. சரியாக சம்பளம் வராத சூழ்நிலை உள்ளது.  மக்கள், விவசாயிகளுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகளை  கோரிக்கையாக வைத்திருக்கிறார்கள். முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றபோது எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கு கூட ஏன் வாக்களிக்கவில்லை என்று நினைக்கக் கூடிய அளவுக்கு நாங்கள் ஆட்சியை நடத்துவோம் என்று சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது கூட்டணிக் கட்சி பிரதிநிதிகள் இருக்கும் தொகுதிகளில் எந்தத் திட்டத்தையும் செய்ய மாட்டோம் என்று தவறான புரிதல் வேண்டாம்.  எப்பொழுதுமே தலைவர் கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலினாக இருக்கட்டும் கூட்டணி கட்சிகளை மதித்து, அந்த பிரதிநிதிகளுக்கு எங்களை விட அதிக முக்கியத்துவம் தந்து அவர்களை அரவணைத்து நடத்தக் கூடிய கூட்டணி தான் இந்த கூட்டணி.


மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - எம்பி கனிமொழி குற்றச்சாட்டு

சென்ற முறை இதற்கு முன்னாடி இருந்த தேர்தல் அறிக்கை சட்டமன்றத்திற்கு தேர்தலுக்கான அறிக்கை அதில் கொடுத்திருக்கக் கூடிய  உறுதிமொழிகளையும் நிறைவேற்றி தான் இருக்கிறோம். பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்.  அதற்கு முன்னால் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. 15 லட்சம் தருகிறோம் என்றனர். இரண்டு தேர்தல் முடிந்துவிட்டது. யாருக்கும் வந்து சேரவில்லை. விவசாயிகளுக்கு தருவேன் என்று சொல்லி இருக்கக் கூடிய அந்தத் தொகை குறைந்து கொண்டே வருகிறது. யாருக்கும் சரியாக போய் சேரவில்லை என்ற ஒரு சூழ்நிலை தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கல்விக்கான நிதி குறைந்து கொண்டே வருகிறது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்கள்.  பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா  நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இன்னும் 50 ஆண்டுகளுக்குள்ளாவது இந்த மசோதா நிறைவேற்றப்படுமா? என்ற சூழ்நிலைதான் தற்போது உள்ளது . இப்படிப்பட்ட ஒன்றிய அரசிடம் தான் நம் பயணிக்க வேண்டிய அவலமான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம். மழையால் சென்னை, தென் மாவட்டங்கள் மிக மோசமாக பதிக்கப்பட்டது ஆனால் இன்றுவரை தரப்பட்டு வரும் நிவாரணங்களை எல்லாம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தான் தந்து கொண்டிருக்கிறார்களே தவிர மத்திய அரசு தரவில்லை. மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட கமிட்டி, மூன்று முறை ஆய்வு செய்துள்ளனர். இரண்டு அமைச்சர்கள் மற்றும் மூத்த மத்திய  அமைச்சர்கள் சென்னைக்கும் தென் மாவட்டங்களையும் பார்வையிட்டு சென்றார்கள். இன்று வரைக்கும் ஒரு பைசா கூட வரவில்லை. இப்படிப்பட்ட  மனநிலையோடு தமிழ்நாட்டுக்கு எதுவும்  செய்யக்கூடாது என்று ஒரு மனநிலையில் தான் மத்திய அரசு உள்ளது. திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி கொண்டு இருக்கிறோம். மகளிர்க்கு வழங்கக்கூடிய ஆயிரம் ரூபாய் திட்டத்தை எவ்வளவு நிதிநிலை சிக்கல்கள் இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றி தந்திருக்கிறார். கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக தான் நிறைவேற்ற முடியும். கண்டிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget