மேலும் அறிய

Keezhadi Excavation: 8 ஆம் கட்ட அகழாய்வில் ஆபரணமாக பயன்படுத்திய பாசி மணிகள் கண்டுபிடிப்பு

அகழாய்வு செய்ய உள்ளே இறங்கிய‌ போது கொடிய விஷம் கொண்ட சுமார் 3 அடி நீளம் கொண்ட கருப்பு நிறம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு உள்ளே இருந்துள்ளது

கீழடியில் கடந்த  2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2ஆம் மற்றும் 3 ஆம் கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல்துறையும், அதனைத் தொடர்ந்து 4 முதல் 7ஆம் கட்டம் வரையிலான அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டனர். கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7-ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. இந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டு  பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை அழகாய்வுப் பணி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழடியில் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாசிகள், கற்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, விளையாட்டு சில்லுகள் என் ஏகப்பட்ட பொருட்கள் கிடைத்து வருகின்றன. 8 ஆம் கட்ட அகழாய்வில் 400க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது கீழடியில் மூன்று குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  கீழடியில் ஒரு குழியில் தோண்டும் போது 4 அடி ஆழத்தில பழங்காலத்தில்  ஆபரண பொருட்களாக பயன்படுத்திய கருப்பு, சிவப்பு, நீலம், என கண்கவரும் வண்ணங்களில் 7 பாசிமணிகள் கண்டுபிடிக்க ப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ஆய்வு செய்யும் பட்சத்தில் இதன் முழு விவரம். தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் கூறினார்கள்.
அதே போல் ஆராய்ச்சியளார்கள் தார்பாயால் மூடப்பட்டிருந்த ஒரு குழியை திறந்து அகழாய்வு செய்ய உள்ளே இறங்கிய‌ போது கொடிய விஷம் கொண்ட சுமார் 3 அடி நீளம் கொண்ட கருப்பு நிறம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு உள்ளே இருந்துள்ளது. உடேன பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆராய்ச்சியாளர்கள் அங்கு வேலை செய்யும் ஊழியர்களை வைத்து அந்த பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டனர். இது மாதிரி அடிக்கடி கீழடி அகழாய்வில் பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அடிக்கடி வருவதாகவும் கூறினார்கள். இருப்பினும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget